Social Icons

Wednesday 31 October 2012

ஆடைச் சட்டம்



காவிநிற ஆடையை அணியலாம்
   
காவிநிறத்தை அதாவது குங்குமப்பூ நிறத்தை ஆண்கள் பயன்படுத்துவது கூடாது. பெண்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.
ஆண்கள் (தங்களது மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (5846)

    பெண்கள் இஹ்ராம் நிலையில் இருக்கும் போது முகத்திரையையும் கையுறைகளையும் குங்குமப்பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த ஆடையையும் அணிவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். அதற்குப் பிறகு (சாதாரண நேரத்தில்) அவள் விரும்பும் வண்ண ஆடைகளையும் குங்குமப்பூ நிறத்திலுள்ள ஆடையையோ பட்டாடையையோ ஆபரணத்தையோ சிர்வாலையோ நீளங்கியையோ காலுறையையோ அணிந்துகொள்ளட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (1556)

ஆண்களின் ஆடைகளை அணியக்கூடாது
   
ஆண்கள் பெண்களைப் போன்று நடப்பதையும் பெண்கள் ஆண்களைப் போன்று நடப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். ஆனால் இன்றைக்கு நாகரீகம் என்ற பெயரில் ஆண்களின் ஆடைகளை பெண்கள் அணிந்துகொண்டு இருக்கிறார்கள். இது தவறாகும்.
நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்கûளும் சபித்தார்கள் .
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (5885)

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்