தப்லீக்
ஜமாஅத்தினர் சில நன்மையான காரியங்களைச் சிறப்பான முறையில் செய்து வருவதை
யாரும் மறுக்க இயலாது. மக்களைத் தொழுகைக்கு அழைப்பது அதிகமான வணக்கங்கள்
புரிவது பாவம் செய்துகொண்டிருந்தவர்களுக்கு சரியான பயிற்சி அளித்து
அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவது சில மார்க்க விஷயங்களைப்
பிடிப்பாகவும் பேணுதலாகவும் இருப்பது இது போன்ற நல்ல விஷயங்களை இவர்களிடம்
காண முடிகிறது. இவ்விஷயத்தில் இவர்களை நாம் பாராட்டவே செய்கிறோம்
இவர்கள்
புரியும் இந்த நன்மையான காரியங்களை மட்டும் சிலர் கவனத்தில் கொண்டு
இவர்கள் தான் மிகச் சரியாக செயல்படுகிறார்கள் என்ற தவறான முடிவுக்கு
வருகின்றனர். தப்லீக் ஜமாஅத்தினருக்கு இப்படி ஒரு முகம் இருப்பது போன்று
இவர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கின்றது. இவர்களுடைய மறுபாதியை பலர்
கவனிக்கத் தவறி விடுகின்றனர்.
ஒருவருடைய அனைத்து செயல்பாடுகளை வைத்துத் தான் அவர் நல்லவரா? கெட்டவரா? என்ற
முடிவை எடுக்க வேண்டும். சமுதாயத்துக்கு தீங்கிழைக்கும் தீயவர்களிடம் கூட
சில நன்மையான காரியங்களைப் பார்க்கத் தான் முடிகிறது. இதனால்
ஒட்டுமொத்தமாக அவர்களை நல்லவர்கள் என்று நாம் கூறி விடுவதில்லை. அவர்களின்
அனைத்து செயல்பாடுகளையும் கவனத்தில் கொண்டே முடிவெடுக்கின்றோம்.
இதே
போன்று தான் தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் நாம் முடிவெடுக்கக்
கடமைப்பட்டிருக்கின்றோம். இவர்களிடம் பல நன்மையான காரிங்கள் இருப்பதைப்
போன்று ஏராளமான வழிகேடுகளும் தவறான நம்பிக்கைகளும் நிறைந்துள்ளது.
இஸ்லாத்தைப் புறக்கணிப்பவர்கள்
நன்மைகளை
ஏவி தீமைகளைத் தடுக்கும் பணியை இஸ்லாம் இந்தச் சமுதாயத்தில்
ஒவ்வொருவரின் மீதும் சுமத்தியுள்ளது. குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் தீமையைத்
தடுப்பதின் அவசியம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது.
குர்ஆன்
நன்மையை மட்டும் ஏவவில்லை. தீமைகளைத் செய்யக் கூடாது எனத் தடுக்கவும்
செய்கின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தூதுப் பணியில் நன்மையை
மட்டும் ஏவவில்லை. மாறாக சமுதாயத்தில் நிலவியிருந்த அனைத்துத் தீமைகளையும்
தடுத்து ஒழிக்கப் பாடுபட்டார்கள். அவற்றை சமூகத்திலிருந்து அகற்றியும்
காட்டினார்கள்.
இப்படிப்பட்ட
ஒரு முக்கியமான பணியைச் செய்ய வேண்டியதில்லை என்பது தப்லீக் ஜமாஅத்தின்
கொள்கை. நன்மையை மட்டும் சொன்னால் போதும். தீமை தானாக சென்று விடும் என்று
குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிராகப் பேசி வருகின்றனர்.
இஸ்லாம்
என்றாலே நன்மையை ஏவும் மார்க்கம். தீமையைத் தடுக்கும் மார்க்கம். இந்த
இரண்டில் ஒன்றை ஏற்று மற்றொன்றை விட்டதன் மூலம் இவர்கள் இஸ்லாத்தின் ஒரு
பாதியை புறக்கணித்து விட்டனர்.
நன்மைகளைச்
சொல்லும் போது மக்கள் எதிர்ப்பதில்லை. தீமைகளைக் கண்டிக்கும் போது தான்
எதிர்ப்புகளும் சிரமங்களும் தலை தூக்குகின்றன. இந்தச் சிரமங்களை
எதிர்கொள்ளும் மனப் பக்குவம் இல்லாத இவர்கள் தங்களால் இது இயலாது என்று
கூறி ஒதுங்கி விட்டால் அது வேறு விஷயம்.
ஆனால்
அவ்வாறு தனது இயலாமையை ஒப்புக் கொள்ளாமல் அதை மறைப்பதற்காக நன்மைகளை
மட்டும் சொல்வதே சிறந்த மார்க்கப் பணி என்றும் இதுவே அறிவுப்பூர்வமான வழி
என்றும் பொய்யான தத்துவத்தைக் கூறுவதை ஒருக்காலும் ஏற்க முடியாது.
சமூகத் தீமைகளை ஒழிக்கவில்லை
இவர்களின்
இந்தத் தவறான கொள்கையால் தான் சமுதாயம் கெட்டு நாசமாகி உள்ளது.
தமிழகத்தில் தவ்ஹீது வருவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே இவர்கள்
இருந்தனர். இவர்களின் வாதத்தில் உண்மை இருந்தால் இவர்கள் சமுதாயத்துக்கு
நன்மையை ஏவிய காரணத்தால் சமூகத்தில் தீமை அழிந்து நல்ல நிலை ஏற்பட்டிருக்க
வேண்டும்.
ஆனால்
தவ்ஹீது ஆரம்பித்த அந்தக் காலகட்டத்தில் சமுதாய நிலையோ படுமோசமாக
இருந்தது. இணைவைப்பு, பித்அத், வட்டி, வரதட்சணை, மூட நம்பிக்கைகள் மற்றும்
எல்லா அநாச்சாரங்களும் வீரியமாக நடந்தேறிக் கொண்டிருந்தது.
தீமையைத்
தடுக்காததின் விளைவால் அந்நேரத்தில் தொழுகையாளியாக இருந்த பலர்
இணைவைத்துக் கொண்டும் பித்அத்களை செய்து கொண்டும் மூடநம்பிக்கைகளில்
மூழ்கியும் இருந்தனர். வட்டி வரதட்சணை போன்ற பாவங்களைச் சர்வ சாதாரணமாக
செய்து கொண்டிருந்தார். பள்ளிவாசல் நிர்வாகிகளே பாவமான காரியங்களுக்கு
முன்னோடியாக இருந்தனர். தப்லீக் ஜமாஅத்தினர் தீமையைக் கண்டிப்பதை
விட்டுவிட்டு நன்மையை மட்டும் ஏவியதே இந்த மோசமான நிலைக்குக் காரணம்.
இதன்
பிறகு தவ்ஹீது பிரச்சாரம் முடிக்கிவிடப்பட்டு தீமைகளுக்கு எதிராகக் குரல்
ஒலித்த பின்பே இந்தத் தீமைகள் ஓரளவுக்கு ஒடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டன.
சமுதாயத்தில்
இந்தத் தீமைகள் புரையோடிப் போயிருந்ததற்கு இவர்களுடைய இந்த தவறான
கொள்கையும் ஒரு காரணம். சிரமம் இல்லாமல் மார்க்கப் பணி ஆற்ற வேண்டும் என்ற
எண்ணமே இந்த நிலைபாட்டிற்கு இவர்களைத் தள்ளியது.
தீமையைத்
தடுத்ததின் விளைவால் வரலாற்றில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்கூடாகக்
கண்ட பிறகும் கூட தங்களின் நிலைபாட்டை இவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை.
இன்றும் இவர்கள் தீமைகளைக் கண்டித்துப் பேசுவதில்லை.
தீமைகள்
இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. எனவே தான் வரதட்சணை போன்ற
மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் நடக்கும் திருமணங்களில் சர்வ
சாதாரணமாக கலந்து கொள்கின்றனர். சில நேரங்களில் தாங்களே இத்தீமைகளைச் செய்ய
வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கொஞ்சம் கூட தடுமாறாமல் இவற்றைச் செய்து
விடுகின்றனர். மார்க்கத்திற்கு எதிராக உறவோ நட்போ வரும் போது மார்க்கத்தை
விட உறவுக்கும் நட்பிற்குமே முன்னுரிமை கொடுக்கின்றார்கள்.
இஸ்லாமிய
பிரச்சாரத்தின் பாதியைப் புறக்கணிக்கச் சொல்லும் இப்படிப்பட்ட ஜமாஅத்தால்
சமுதாயம் ஒருக்காலும் முன்னுக்கு வர முடியாது. இவர்களால் சமுதாயத்தை நல்ல
ஒரு நிலைக்கு கொண்டு வரவும் முடியாது.
அடிப்படையில் கோளாறு
குர்ஆன்
ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே ஒரு முஸ்லிமுடைய அடிப்படைக் கொள்கையாகும்.
இந்த அடிப்படைக் கொள்கையில் கோட்டை விட்டவர் மறுமையில் வெற்றி பெற
முடியாது.
தப்லீக்
ஜமாஅத்தினர் இந்த அடிப்படைக் கொள்கையில் கோட்டை விட்டுள்ளனர். குர்ஆன்
ஹதீஸை என்ற வட்டத்தைத் தாண்டி மத்ஹபுகளை மார்க்கமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
மத்ஹபுச்
சட்டங்கள் மனிதர்களின் சுய சிந்தனையால் உருவாக்கப்பட்டவை. குர்ஆனுடனும்
ஹதீஸ்களுடன் மோதும் வகையில் அமைந்தவை. இந்த வழிகேட்டை இவர்கள் சரி என்று
நம்புகின்றனர். தனது வணக்க வழிபாடுகளை இதனடிப்படையிலேயே அமைத்துக்
கொள்கின்றனர். இந்த சட்டங்கள் குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் மாற்றமாக
அமைந்திருப்பதை அறிந்த பின்னரும் இவற்றைப் பற்றிப் பிடித்துக்
கொண்டிருக்கின்றனர்.
தவ்ஹீதை மட்டும் எதிர்ப்பார்கள்
தீமைகளைத் தடுக்க வேண்டியதில்லை என்ற கொள்கையில் உள்ள இவர்கள் நம் விஷயத்தில் மட்டும் இக்கொள்கையைத் தளர்த்திக் கொண்டனர்.
இவர்களின்
கருத்துப்படி நமது கொள்கையும் செயல்பாடுகளும் தீமையானது. இவர்களின்
கொள்கைப்படி பார்த்தால் இவர்கள் நம்மை எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை.
ஆனால் இவர்கள் தமிழகத்தில் பல பகுதிகளில் நமக்கு எதிராக முழு முயற்சியுடன்
செயல்படுகின்றனர். எப்பாடு பட்டாவது நம்மை அழித்துவிட வேண்டும் என்று
நினைக்கின்றனர்.
தப்லீக்
உலமாக்களும் கப்று வழிபாட்டை ஆதரிக்கும் பரேலேவிகளும் கொள்கையில்
மாறுபட்டவர்கள். தர்ஹா வழிபாட்டை அங்கீகரிக்காத தப்லீக் உலமாக்கள்
பரேலவிஸத்திற்கு எதிராகப் போர்க்குரல் கொடுக்கவில்லை. போர்க்கொடி
உயர்த்தவில்லை.
மாறாக மத்ஹபுகள் கூடாது என்று நாம் சொன்னதற்காக இவர்களும், பரேலவிகளும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, நமக்கு எதிராகக் கை கோர்த்துக் கொண்டு நம்மைப் பூண்டோடு களையெடுக்கக் களமிறங்கினர்.
தப்லீக்
அணியில் முன்னணி வகித்து சமீபத்தில் காலமான கலீல் அஹ்மது கீரனூரி அவர்கள்
நமக்கு எதிராகப் போர் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். பரேலவிஸத்தை
எதிர்ப்பதை விட நம்மை எதிர்ப்பதில் தான் முனைப்புடன் செயல்பட்டார்.
தப்லீகும், பரேலவிஸமும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமானது. இப்படிப்பட்டவர்கள் நம்மை எதிர்ப்பதில், ஒழிப்பதில் ஓரணியில் நின்றனர் என்றால் இவர்களது வெறுப்பு எந்த அளவுக்கு ஆழமானது என்பதை நம்மால் உணர முடிகின்றது.
இதில்
வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் இவர்கள் நம்மை மேடையில் பிளந்தெடுத்தது
போன்று பரேலவிகளைப் பிளந்தெடுக்க வேண்டாம். கொஞ்சம் பிடித்தாவது விடலாம்.
அப்படிக் கூடச் செய்யவில்லை. ஆனால் நம்மை வாட்டி வறுத்தெடுக்க வகை வகையான
கூட்டங்கள், மாநாடுகள்!
அரைக்க
அரைக்க சந்தனம் மணக்கும்! தீட்டத் தீட்ட வைரம் மிளிரும் என்பது போல்
இவர்கள் நம்மைத் திட்டத் திட்ட இறையருளால் நாம் வளர்ந்து கொண்டு தான்
இருக்கிறோம், அல்ஹம்து லில்லாஹ்!
இன்று
இஸ்லாமிய மாநாடுகள் என்றால் அது ஏகத்துவ மாநாடுகள் என்றாகி விட்டன.
இவர்களது மாநாடுகளே பள்ளிவாசலின் வளாகங்களில் தான் நடக்கின்றன. இது
தமிழகத்தில் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கும் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஆகும்.
தனிமனித வழிபாடு
இஸ்லாம்
அனுமதிக்காத தனிமனித வழிபாட்டை இவர்களிடம் காண முடியும். அமீர் ஷாப்
என்று ஒருவரை ஏற்படுத்தி அவரை மற்ற மனிதர்களை விட்டும்
வித்தியாசப்படுத்திப் பார்க்கின்றனர். மக்கள் நீண்ட அணியில் நின்று ஒருவர்
பின் ஒருவராக அவரிடம் முசாபாஹா செய்யும் பழக்கத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
இந்த
அமீர் இறைநேசர் என்பது நூறு சதவீதம் உறுதியானதைப் போன்றும் இவரிடம்
முசாபாஹா செய்தால் தனக்கு நல்வாழ்வு கிடைப்பது நிச்சயம் என்ற
நம்பிக்கையிலும் இவ்வாறு முசாபஹா செய்கின்றனர்.
இது இஸ்லாத்திற்குப் புறம்பானதாகும். அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் யார்? அவனுக்கு நெருக்கமானவர் யார்? என்பதை
யாராலும் உறுதிபடக் கூற முடியாது. அப்படி ஒருவர் உறுதியாக
அறியப்பட்டாலும் கூட இவ்வாறு செய்து மக்களை விட்டும் தன்னை தனிமைப்படுத்தி
பெருமைப்படுத்திக் கொள்வது கூடாது.
ஏனென்றால்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, இந்த உலகத்தில் வாழும்போதே அவர்களால்
இறைநேசர்கள் என்று சான்று வழங்கப்பட்ட அவர்களின் தோழர்களோ இவ்வாறு தங்களை
மக்களிடம் பெருமைபடுத்திக் கொள்ளவில்லை. மாறாக மக்களுடன் மக்களாக
எல்லோரையும் போன்றே வாழ்ந்தார்கள். பணிவை வெளிப்படுத்தினார்கள். சொல்லப்
போனால் தங்களை மக்களுக்குப் பணியாற்றும் பணியாளர்கள் என்றே கருதி மக்கள
நலப் பணிகளை செய்தனர்.
பெரியார் கதைகள்
இவர்கள்
மக்களுக்கு நல்லுபதேசங்களைச் செய்கின்ற போது மக்களுக்குத் தேவையான சரியான
தகவல்களை மட்டும் கூறுவதில்லை. மாறாக பொய்யான கதைகளையும் கப்சாக்களையும்
கூறுகின்றனர்.
பெரும்பாலும்
இந்த கப்சாக்கள் பெரியார்களைப் பற்றிய கதைகளாகவே இருக்கின்றது. இவை
கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் இவற்றைச் சிந்தித்துப் பார்த்தால்
இவற்றில் ஏராளமான அறியாமையும் மார்க்கத்திற்கு முரணான அம்சங்களும் இருப்பதை
காணலாம்.
மனித
குலத்துக்குத் தேவையான அனைத்து உபதேசங்களும் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும்
ஏராளமாக பரவி கிடக்கின்றது. அப்படியிருக்க இந்த புருடாக்கள் எதற்கு? இவை மக்களை அறிவீனர்களாக ஆக்குமே தவிர அறிவாளிகளாக ஆக்காது.
கடமை தவறுபவர்கள்
ஒரு
மனிதன் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை இஸ்லாம் வலியுறுத்துவதைப்
போன்று பிற மனிதர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் இஸ்லாம்
வலியுறுத்துகின்றது. இந்தக் கடமைகளை ஒருவர் முறையாக நிறைவேற்றினாôல் இதுவும் வணக்கமாகி விடுகின்றது. எனவே அதற்கு நன்மை உண்டு என்று மார்க்கம் கூறுகின்றது.
இஸ்லாத்தின்
உபதேசங்கள் கொள்கை கோட்பாடுகள் சட்டதிட்டங்கள் ஆகியவை அனைத்தும் பிறரைப்
பாதிக்காத வகையில் பிறருக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய வகையிலேயே
அமைந்துள்ளது.
மார்க்கத்தை
அறிந்து கொள்வதற்காக குறிப்பிட்ட சில நாட்களை இதற்கு என ஒதுக்குவது
மார்க்கத்தில் குற்றமில்லை. மாறாக இது ஒரு நன்மையான காரியமே. ஆனால் தான்
ஆற்ற வேண்டிய மற்ற கடமைகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் இந்த நல்ல
காரியத்தைச் செய்ய வேண்டும்.
இந்த சாதாரண விஷயத்தைக் கூட தப்லீக் ஜமாஅத்தினர் விளங்கவில்லை. ஒரு வாரம் ஜமாஅத், 40 நாள்
ஜமாஅத் என்று பல நாட்களை ஒதுக்குமாறு இவர்கள் மக்களிடம் கூறுகின்றனர்.
குடும்ப சூழ்நிலையின் காரணத்தால் இதில் வர இயலாதவர்களும் இருப்பார்கள்.
இத்தகையவர்கள் நாங்கள் கடையைப் பார்க்க வேண்டியுள்ளது. குடும்பத்தைப்
பார்க்க வேண்டியுள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையில் எங்களால் ஜமாஅத்திற்கு
வர இயலாது என்று கூறுவர்.
ஆனால்
ஜமாஅத்தினர் இவர்களை விட்டு விடுவதில்லை. குடும்பத்தை அல்லாஹ் பார்த்துக்
கொள்வான் என்று கூறி இவர்களை அழைத்துச் சென்று விடுகின்றனர்.
இவர்களின்
இத்தகைய பிரச்சாரத்தால் பலர் தான் ஆற்ற வேண்டிய கடமைகளை விட்டுவிட்டு
அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் ஜமாஅத்திற்குப் புறப்பட்டு
விடுகின்றனர். ஆனால் இவர்களின் குடும்பமோ ஊரில் சிரமப்பட்டுக்
கொண்டிருக்கும்.
தப்லீக்
ஜமாஅத்தில் செல்லும் பலரது குடும்பம் இந்தச் சிரமத்தை அனுபவித்து
வருகின்றது. பலர் தங்களுடைய பொருளாதாரத்தை இழந்துள்ளனர். அல்லாஹ்
பார்த்துக் கொள்வான் என்ற குருட்டு நம்பிக்கையே இதற்குக் காரணம்.
தன்னால்
இயன்ற முயற்சிகளைச் செய்துவிட்டு இதன் பிறகே இறைவன் பார்த்துக் கொள்வான்
என்று நம்பிக்கை வைக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் இவர்களோ
முயற்சியைக் கைவிட்டுவிட்டு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறார்களாம்.
சாப்பாட்டு
விஷயத்தில் இறைவன் மீது பழிபோடாமல் தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை முறையாக
செய்கின்றனர். ஜமாஅத்திற்குச் செல்லும் போது உணவுப் பொருட்களையும்
பாத்திரங்களையும் ஒன்று விடாமல் தேவையான அனைத்தையும் எடுத்துச்
செல்கின்றனர். இறைவன் பார்த்துக் கொள்வான் என்று கூறி இவற்றை விட்டு
விடுவதில்லை.
மேலும்
தப்லீக் ஜமாஅத்தில் உள்ள பலர் எளிமை என்ற பெயரில் தங்களைத் தானே
வருத்திக் கொள்கின்றனர். மார்க்கம் அனுமதித்த இன்பங்களை ஹராமாக்கிக்
கொள்கின்றனர்.
மேலும் விபரத்துக்கும் இவற்றையும் பார்க்கவும்
தப்லீகின் தஃலீம் தொகுப்பு 1993 மே
1993 மே அல்ஜன்னத் இதழில் எழுதப்பட்ட ஒரு தொடர் - தேவையான திருத்தங்களுடன்
ஒரு
ஹதீதுக் கலை நிபுணர் குர்ஆன் வசனங்களுக்கோ நபிமொழிகளுக்கோ தவறான விளக்கம்
கொடுப்பவராக அல்லது கொடுக்கப்பட்ட தவறான விளக்கங்களை பாராட்டுபவராக
இருக்க மாட்டார். ஸகரிய்யா சாகிப் தன் தஃலீம் தொகுப்பு நூலில் பல
இடங்களில் தவறான விளக்கங்களைக் கொடுத்திருப்பதுடன் வேறு பலர் கொடுத்த
தவறான விளங்கங்களைப் பாராட்டவும் செய்கிறார். தெளிவான சான்றுகளையும்
சிக்கலானவைகளாக சித்தரிக்கின்றார்.
தஃலீம் தொகுப்பு திக்ரின் சிறப்புகள் அத்தியாயம் பக்கம் 783 ஐப் புரட்டுங்கள்.
ஈமான்
கொண்டவர்களே அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். மேலும் உண்மையாளர்களுடன்
இருங்கள் என்ற (9:119) இறை வசனத்தை எழுதிவிட்டு அடுத்து தொடர்கிறார்.
நீங்கள்
அல்லாஹ்வுடன் இருங்கள். அது உங்களுக்கு முடியவில்லையானால் அல்லாஹ்வுடன்
இருப்பவர்களுடன் இருங்கள் என்று சூஃபியாக்கள் கூறுகின்றனர்.
இந்த விபரீதமான பொருளை இவர் கொடுக்கும் இவரது அசட்டுத் துணிச்சலை என்னவென்று கூறுவது? இவர் விளங்கியிருக்கின்ற விளக்கம் தவறானது மட்டுமல்ல. வழிகேட்டுக்கு நேராக இட்டுச் செல்லும் பொருளாகும் என்பதை இங்கு காண்போம்.
இந்த
வசனத்திற்கு முந்தைய வசனத்தைப் படியுங்கள். தபூக் யுத்தத்தில் பங்கு
கொள்ள நபித் தோழர்கள் திரளாகப் புறப்பட்டார்கள். நயவஞ்சகர்கள் வழமை போல்
இந்த யுத்தத்திற்குப் புறப்படவில்லை . திரும்பி வந்த நபி ஸல் அவர்களிடம்
நயவஞ்சகர்கள் நல்லவர்களைப் போல் பாசாங்கு செய்து பொய்க் காரணம் கூறி
நபிகளாரிடமிருந்து விடை பெற்றுச் சென்றார்கள். அந்த யுத்தத்திற்கு மூன்று
உண்மைத் தோழர்கள் புறப்படவில்லை. கலந்து கொள்ளாமைக்குத்
தகுந்த காரணமும் இல்லை. திரும்பி வந்த நபியவர்களிடம் இம்மூவரும் உண்மையைச்
சொல்லி விட்டார்கள். தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள். இம்மூவரும்
நபியவர்களால் தண்டிக்கப்பட்டார்கள். ஐம்பது தினங்களுக்குப் பின்னர்
இவர்களை மன்னித்து விட்டதாக இறைவன் (9:118) வசனத்தை இறக்கினான். உண்மையே
உரைத்த இத்தோழர்கள் இறை மன்னிப்பை அடைந்தார்கள். பொய்க் காரணம் கூறிய
நயவஞ்சகர்கள் இறை மன்னிப்பென்ற பாக்கியத்தை இழந்தார்கள் (இச்சம்பவத்தை
விரிவாக புகாரி உள்பட பல்வேறு ஹதீது நூல்களில் காணலாம். ஸகரிய்யா ஸாகிபும்
இந்த முழு சம்பவத்தை தனது தஃலீம் தொகுப்பில் ஸஹாபாக்களின் வரலாறுகள் என்ற
தலைப்பில் ஒன்பதாவது சம்பவமாக இடம் பெறச் செய்திருக்கிறார்) இம்மூவருக்கும் வழங்கப்பட்ட இறை மன்னிப்பு தொடர்பான வசனத்திற்கு பின்னரே 9:119 வசனம் அமைந்துள்ளது.
இதிலிருந்து நாம் விளங்குவது என்ன?
இந்த மூவரைப் போல் நாமும் இறைவனை அஞ்ச வேண்டும். அவர்கள் உண்மை பேசி இறையருளுக்குரியவர்களாக திகழ்ந்ததைப் போல்
நாமும் வாழ வேண்டும். இதுவே இந்த வசனம் நமக்குத் தரும் போதனையாகும்.
ஆனால் இந்த வசனத்தின் கருத்தை வேறு எங்கோ இவர் கொண்டு சொல்கிறார் திசை
திருப்புகிறார்.
இறைவனை
அஞ்சுங்கள் என்றால் இறைவனுடன் இருங்கள் என்று பொருளாம். உண்மையாளர்களுடன்
இருங்கள் என்றால் இறைவனுடன் இருக்க முடியாத நிலையில் இறைவனுடன்
இருப்பவர்களுடனாவது இருங்கள் என்று பொருளாம்.
நபித் தோழரோ, நபித்தோழர்களிடம் பாடம் பெற்ற மேதைகளோ ,நபிமொழித்
தொகுப்புகளைத் தந்த மூதறிஞர்களோ இந்த வினோத விளக்கத்தைத் தந்ததாக இவர்
குறிப்பிடவும் இல்லை. எந்த நூலையும் இவர் மேற்கோள் காட்டவும் இல்லை. மாறாக
சூஃபியாக்கள் என்போர் தாம் இவ்வாறு விளக்கம் சொன்னதாக கூறுகிறார்.
முறைகேடான விளக்கங்களை சூஃபியாக்கள் என்போர் தலைகளில் கட்டிவிடுவது இவரது வாடிக்கை.
அத்தோடு விட்டாரா? 482 ஆம் பக்கத்தில் இதே 9:119 வசனத்தை எழுதிவிட்டு தொடர்ந்து எழுதுகிறார்.
இவ்விடத்தில் உண்மையாளர்கள் என்பது ஞானிகளாகிய சூஃபியாக்களையே குறிக்கின்றது.
இவர்களுக்கு ஸஹாபாக்களின் மீது என்ன கோபம்?
தாபியீன்கள், தபாஉத்தாபிஈன்கள் மீது என்ன வெறுப்பு?
இவர்களையெல்லாம் இந்த வசனத்தின் உண்மையாளர்கள் என்பது குறிக்காதாம்.
இவர் போற்றும் சூஃபியாக்களைத் தான் குறிக்குமாம். இந்த சூஃபியாக்களின் மாண்புகளை (?) இவர் விவரிக்கும் வாசகங்களைப் படியுங்கள் (பக்கம் 482
கண்ணியம் வாய்ந்தவரென்று நீ கருதும் ஒரு பெரியவரைச் சந்தித்தால் அவருக்கு ஊழியம் செய்வாயாக. அவரிடம் இறந்த மனிதனைப் போன்று ஆகிவிடு. அவர், தான் விரும்பியபடி உன்னைப் பயன்படுத்திக் கொள்ளட்டும். உன்னுடைய விருப்பப்படி
நீ செயல்படாதே. அவர் இடும் உத்தரவுகளை உடனே நிறைவேற்று . அவர் தடுப்பதை
விட்டும் விலகிக் கொள். அவர் தொழில் செய்யும் படி கூறினால் தொழில் செய்.
அவர் உட்காரும்படிக் கூறினால் உட்காருவாயாக ..
இவை இவரது மணிவாசகங்கள் (?)
நமக்கென்று
சுயவிருப்பம் ஏதும் கூடாதாம். தொழில் செய்யலாகாதாம். அவர்
விருப்பத்திற்கு நம்மைப் பயன்படுத்துவாராம். அந்த பெரியாருக்கு இவ்வாறு
பணிவதால் தான். பிணம் போல் ஆவதால் தான் இறைவனது தொடர்பை நாம் அடைய
முடியுமாம். இவர் தான் ஞானியாம். பூரண குருவாம்.
ஆனால் தனக்குப் பிடித்தமில்லாதவருடன் வாழுமாறு நபியவர்கள் ஒரு பெண்ணிடம் கூறிய போது இது உங்கள் கட்டளையா? என்று
அப்பெண் மணி நபி ஸல் அவர்களிடம் வினவினார். (இல்லை அவருக்காக) நான்
சிபாரிசு தான் செய்கிறேன் என்று நபி ஸல் கூறவும் அல்லாஹ்வின் தூதரே அவர்
எனக்குத் தேவையில்லை என்று அப்பெண் மறுத்து விட்டார். இச்செய்தி புகாரியில்
பதிவாகியுள்ளது. இச்செய்தி இவருக்குத் தெரியாதா?
நபி
ஸல் அவர்களே ஒரு பெண்ணின் சுயவிருப்பத்திற்கு வழிவிட்டிருக்கிறார்கள்.
நபியவர்களின் கால்தூசிக் கூட தகுதியுற்றவர்களின் சுயவிருப்பத்திற்கு நாம்
பலியாக வேண்டும் என்று கூறும் இவரது தப்லீக் எத்திவைப்பது எதனை? நபிவழியையா? மனிதர்களை அடிமைப்படுத்தத் துடிக்கும் கும்பல்களின் தீயவழியையா?
இறைவனுடன் நமக்குத் தொடர்பை ஏற்படுத்தும் அதி அற்புத ஞானிகளாம் சூஃபியாக்கள்.
எந்த சூஃபியாக்கள்?
1.)மிம்பரில் ஏறி நிர்வாண கோலத்தில் சொற்பொழிவுவாற்றிய சூபிகளையா
2.பலபெரியார்கள்
முன்பு காற்று விட்டுவிட்டு இன்னொரு வரைக் ட்டி இவர்தான் காற்று ட்டார்
என்று பழிசொல்லி தலைகுனியச் செய்வார்களே அந்த சூபியாக்களையா
3.பெண்களையும், சிறுவர்களையும் தகாத செயல்களுக்கு அழைத்தார்களே அந்த சூபியாக்களையா
4.முக்கடவுள் நம்பிக்கையுடையோரும் சத்தியவான்களே என்று கூறிய இப்னு அரபி போன்ற சூபியாக்களையா
5.இறைவன் என்னை உருவாக்க நான் அவனை உருவாக்கினேன் என்று கூறுவார்கள் என்று கூறிய அப்துல் கரீம் அல்ஜியலீ என்பவனையா?
6.காளைக் கன்றை வணங்கிய கூட்டத்தார் அல்லாஹ்வைத் தான் வணங்கினார்கள். ஏனெனில் எல்லாம் அல்லாஹ் தான் என்று கூறிய இப்னு அரபி கும்பலையா?.
7.மகனை அறுப்பதாக கனவு கண்ட இப்ராஹீம் நபி அலை ஆட்டை அறுக்காமல் மகனையே அறுக்க ஆயத்தமானது தவறு என்று கூறிய இப்னு அரபீ என்பவனையா?
8 நாங்கள் கடலில் மூழ்கி விட்டோம் ஆனால் இறைத் தூதர்கள் கரைகளில் தான் நிற்கிறார்கள் என்று கூறினார்களே அந்த சூபிக்களையா?
யூசுப்
நபி அலை அவர்களை கிணற்றில் வீசி தந்தையிடமிருந்து பிரித்த சகோதார்கள்
இந்த மாபாதகச் செயல்களை இறைவனின் கட்டளைப் படி வஹீயின் அடிப்படையில் தான்
செய்தனர் என்று இட்டுக்கட்டிய கேடுகெட்ட சூபிகளையா?.
10.அய்யூப்
நபி அலை அகநோயில் சிக்கினார்கள். இறைத் தொடர்பிலிருந்து விலகினார்கள்.
இறைவனல்லாதாருடன் தொடர்பு வைத்தார்கள் என்று கூறிய அப்துல் அஸீஸ் தப்பாக்
என்ற சூஃபியையா?
சூஃபியாக்கள் என்பர் நபிமார்களேயல்லர். சஹாபாக்களுமல்லர் தாபியீன்களுமல்லர், இமாம்களுமல்லர், இறைநேசச்
செல்வர்களுமல்லர் . மாறாக நபிமார்களையும் நல்லடியார்களையும் மட்டம் தட்டி
கேடு கெட்டவர்களை நல்லடியார்கள் என்று காட்டியவர்கள் தான் சூபியாக்கள்.
அந்த வழிகேடர்களுடன் நாமும் இணைய வேண்டும் என்று ஜகரிய்யா சாகிப் கட்டளையிடுகிறார்.
இனியேனும் இவரது தஃலீம் நூலைப் பள்ளிகளில் படிப்பதை இந்தச் சமுதாயம் நிறுத்துமா
No comments:
Post a Comment