Social Icons

Wednesday 17 October 2012

வித்ரு தொழுகை

   “நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவின் முற்பகுதியிலும் இரவின் நடுப்பகுதியிலும் இரவின் கடைசிப் பகுதியிலும் வித்ரு தொழுதார்கள். ஸஹர் நேரம் வரை வித்ரு தொழுதுள்ளார்கள்” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதி, நஸயீ    “இரவில் நீங்கள் தொழும் தொழுகைகளில் கடைசியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
   “உங்களில் எவரேனும் இரவில் (பின் நேரத்தில்) தொழ முடியாது என அஞ்சினால் வித்ரை தொழுது விட்டு உறங்குங்கள். இரவின் கடைசியில் எழலாம் என்று எவருக்கு நம்பிக்கையுள்ளதோ அவர் இரவின் கடைசியில் வித்ரைத் தொழட்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத்
    “வித்ரு தொழுகை அவசியமானது. எவர் ஏழு ரக்அத்கள் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். எவர் ஐந்து ரக்கத்துகள் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். எவர் ஒரு ரக்அத் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஅய்யூப் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத்



    வித்ரு தொழும் முறை
   மூன்று ரக்அத் வித்ரு தொழுவதாக இருந்தால் இடையில் அமரக்கூடாது! அதாவது மக்ரிப் தொழுகையில் எப்படி இரண்டாம் ரக்அத்தில் அமருகிறோமோ அதைப்போன்று அமரக்கூடாது. மூன்றாம் ரக்அத்தின் இறுதியில் அமர்ந்து ஸலாம் கூறி முடிக்கவேண்டும். கடைசி ரக்அத்தின் ருக்கூவிற்கு முன்போ, பின்போ குனூத் ஓதிக்கொள்ள வேண்டும்.
    “நபி صلى الله عليه وسلم அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி ரக்அத் தவிர பிற ரக்அத்களில் அமர மாட்டார்கள்” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: பைஹகீ
    “மூன்று ரக்அத்கள் வித்ரு (தொழுதால்) மக்ரிபைப் போல் தொழாதீர்கள்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்” அறிவிப்பவர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: பைஹகீ

    ஐந்து ரக்அத்
    ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுவதாக இருந்தால் இடையில் எந்த ரக்அத்திலும் அமராமல் கடைசி ரக்அத்தான ஐந்தாம் ரக்அத்தில் மட்டும் அமர்ந்து சலாம் கூறி முடிக்க வேண்டும். கடைசி ரக்அத்தின் ருகூவிற்கு முன்போ அல்லது பின்போ குனூத் ஓதிக்கொள்ள வேண்டும்.
   “நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். ஐந்தாம் ரக்அத்தில் மட்டுமே அமர்ந்தார்கள்” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்

 ஏழு ரக்அத்
    ஏழு ரக்அத் தொழும்போது இடையில் எந்த ரக்அத்திலும் அமராமல் ஏழாம் ரக்அத்தில் மட்டும் அமர்ந்து ஸலாம் கூறலாம். அல்லது ஆறாம் ரக்அத்திலும் ஏழாம் ரக்அத்திலும் அமர்ந்து ஏழாம் ரக்அத்தில் ஸலாம் கூறலாம்.
   நபி صلى الله عليه وسلم அவர்கள் ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். கடைசி ரக்அத்தில் மட்டுமே உட்கார்ந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
    நபி صلى الله عليه وسلم அவர்கள் ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். ஆறாவது ரக்அத்திலும் ஏழாவது ரக்அத்திலும் மட்டுமே உட்காருவார்கள். ஏழாம் ரக்அத்தில் ஸலாம் கொடுப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அபூதாவூத், நஸயீ
   ஒன்பது ரக்அத்
   ஒன்பது ரக்அத்கள் வித்ரு தொழுவதாக இருந்தால் எட்டாவது ரக்அத்திலும் ஒன்பதாவது ரக்அத்திலும் அமர்ந்து ஒன்பதாம் ரக்அத்தில் மட்டுமே சலாம் கூறி முடிக்கவேண்டும். கடைசி ரக்அத்தின் ருகூவிற்கு முன்போ அல்லது பின்போ குனூத் ஓதிக் கொள்ளவேண்டும்.   
   நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒன்பது ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். எட்டாவது ரக்அத்தில் உட்கார்ந்து விட்டு ஒன்பதாம் ரக்அத்தில் சலாம் கொடுப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், நஸயீ

    குனூத் ஓதுதல்
    வித்ரை ஒரு ரக்அத் முதல் ஒன்பது ரக்அத்கள் வரை ஒற்றைப்படையாக விரும்பியவாறு தொழலாம் என்பதையும், அப்படி தொழும்போது கடைசி ரக்அத்தின் ருகூவிற்கு முன்போ அல்லது பின்போ குனூத் ஓத வேண்டுமென்பதையும் பார்த்தோம். இன்றைக்கு குனூத் என்ற பெயரால் சில துஆக்களை ஓதுகின்றனர். ஆனால் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஓதிய துஆ:
    நபி صلى الله عليه وسلم ஓதிய கூனூத்
   اَللَّهُمَّ اهْدِنِيْ  فِيْ مَنْ هَدَيْتَ وَعَافِنْيْ فِيْمَنْ عَافَيْتَ وَتَوَلََََّنِيْ فِيْمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِيْ فِيْمَا اَعْطَيْتَ وَقِنِيْ شَرَّ مَاقَضَيْتَ فَاِنَّكَ تَقْضِيْ وَلاَ ُيقْضى عَلَيْكَ اِنَّهُ لاَيَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ
   அல்லாஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதை(த்)த வஆஃபீனீ ஃபீமன் ஆஃபைத்த வதவல்லனீ ஃபீமன் தவல்லை(த்)த வபாரிக்லீ ஃபீமா அஃதை(த்)த வகினீ ஷர்ர மாகளை(த்)த ஃபஇன்னக தக்ளீ வலா யுக்ளா அலை(க்)க இன்னஹு லாயதில்லு மன் வாலை(த்)த தபாரக்த ரப்பனா வதஆலை(த்)த அறிவிப்பவர்: ஹஸன் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜ்ஜா, நஸயீ
    பொருள்: இறைவா! நீ நேர்வழி காட்டியவர்களுடன் சேர்த்து எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ ஆரோக்கியம் அளித்தவர்களுடன் சேர்த்து எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! நீ பொருப்பேற்றுக் கொண்டவர்களுடன் சேர்த்து எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ எனக்குக் கொடுத்தவற்றில் பரகத்(விருத்தி) செய்வாயாக! என் விஷயத்தில் நீ விதியாக்கிய தீங்குகளை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! எதையும் விதியாக்குபவன் நீயே! உனக்கு எவரும் விதியேற்படுத்த முடியாது. நீ எவருக்குப் பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர் இழிவடைய மாட்டார்.

   இரவில் நீங்கள் தொழும் தொழுகைகளில் கடைசியாக வித்ரை ஆக்குங்கள்! என்று நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ
   “உங்களில் எவரேனும் இரவில் (பின் நேரத்தில்) தொழ முடியாது என அஞ்சினால் வித்ரை தொழுது விட்டு உறங்குங்கள். இரவின் கடைசியில் எழலாம் என்று எவருக்கு நம்பிக்கையுள்ளதோ அவர் இரவின் கடைசியில் வித்ரைத் தொழட்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத்

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்