Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 6

 ஒளு (சுத்தம்) பற்றிய நூல்

என்னுடைய உம்மத்தவர்களில் எழுபது ஆயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவனம் புகுவர் என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்று பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 101

ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான் கூறுகிறார். நான் ஸயீது பின் ஜுபைர் அவர்களுடன் இருந்தேன் அப்போது அவர் “உங்களில் நேற்று இரவு உடைந்த நட்சத்திரத்தை கண்டது யார்?” எனக்கேட்டார். (அதற்கு) நான் எனக்கூறிவிட்டு “நிச்சயமாக நான் தொழுகையில் இருக்கவில்லை எனினும் தேள் என்னை கொட்டிவிட்டது என்றேன் (அப்படியென்றால்) நீ என்ன செய்தாய்?” எனக் கேட்டார். நான் ஓதி ஊதிக்கொண்டேன் எனக்கூறினேன். அவ்வாறு உன்னைச் செய்ய தூண்டியது எது? எனக்கேட்டார்.

ஷஅபீ நமக்கு அறிவித்த அந்த ஹதீஸ்தான் என்றேன். ஷஅபீ உங்களுக்கு எந்த ஹதீஸை அறிவித்தார் எனக்கேட்டார். (அதற்கு நான்) புரைதா பின் ஹுஸைப் அல் அஸ்லமீ எங்களுக்கு “கண் பார்வை, தேள்கடி, விஷம் போன்றவைகளுக்குகல்லாது ஓதிப்பார்த்தல் இல்லை” எனக்கூறினார் (என்றேன்). கேட்டவாறு யார் செயல்பட்டாரோ அவர் நல்லதே செய்துவிட்டார் எனினும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்ல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களைப்பற்றி நமக்கு (கீழ்கண்டவாறு) அறிவித்தார்கள். (அதாவது)

எனக்கு சமூகத்தவர்களைக் காட்டப்பட்டது ஒரு நபியை நான் கண்டேன். அவருடன் பத்து பேருக்கு குறைந்த ஒரு கூட்டமே இருந்தது? (மற்றொரு) நபியை நான் கன்டேன். அவருடன் ஓரிரு மனிதர்களே இருந்தனர். இனி ஒரு நபி(யை கண்டேன்) அவருடன் எவருமே இல்லை. அச்சமயம் பெருங்கூட்டம் ஒன்றை எனக்கு உயர்த்திக்காட்டப்பட்டது. நிச்சயமாக அவர்கள் எனது உம்மத்தவர்கள் என நான் எண்ணினேன். அப்போது இவர்தான் மூஸாவும் அவரது சமூகத்தவர்களும் என எனக்குக் கூறப்பட்டது. அதற்கு மேலே என் பார்வையை செலுத்தினேன். அங்கே ஒரு பெருங்கூட்டமிருந்தது. மற்றொரு மேல்மட்டத்தைப் பார்வையிடுமாறு எனக்கு கூறப்பட்டது. அங்கே பெருங்கூட்டமிருந்தது. இது தான் உமது உம்மத்து என எனக்கு கூறப்பட்டது. அவர்களில் எழுபது ஆயிரம் பேர் (கேள்வி) கணக்கின்றி (எவ்வித) தண்டனையுமின்றி சுவனம் செல்வர். அதன்பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து தங்களது அறையில் நுழைந்து விட்டனர். (வெளியிலிருந்த) ஜனங்கள் கேள்வி கணக்கின்றி எவ்வித தண்டனையும் இன்றி சுவனம் புகும் அவர்களைப்பற்றி (யோசிக்க ஆரம்பித்து) அதிலேயே மூழ்கியும் விட்டனர். அல்லாஹ்வின் தூதரோடு உடனிருந்த ஸஹாபாக்களாக (அவர்கள்) இருக்கும் என சிலர் கூறினர்.

இஸ்லாத்திலேயே பிறந்து அல்லாஹ்வுக்கு யார் எதையும் இணையாக்கவில்லையோ அவர்களாக இருக்கலாம் எனவும் சிலர் கூறினர். இதுபோன்றே பலவற்றைக் கூறினர். (இதற்கிடையில் உள்ளே சென்ற அல்லாஹ்வின் தூதர்) அவர்கள் வெளியேறி, மக்களுக்கு மத்தியில் (வந்தனர்). நீங்கள் எவ்விஷயத்தில் மூழ்கியுள்ளீர்கள் எனக்கேட்டனர். (அதற்கவர்கள் தாங்கள்) பேசிக் கொண்டிருந்ததை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தெரிவித்தனர்.

(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் - அவர்கள் யாரெனில்). அவர்கள் ஓதிப்பார்க்கவோ, மற்றவர்களை ஓதிப்பார்க்கத் தேடவோமாட்டார்கள். சகுனம் பார்க்கவும் மாட்டார்கள். தங்களது இரட்சகனின் மீதே பாரஞ்சாட்டுவார்கள் எனக்கூறினார்கள்.

(கூட்டத்திலிருந்த) உக்காஷா பின் மிஹ்ஸன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களில் அல்லாஹ் என்னையும் ஆக்க பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். நீர் அவர்களில் உள்ளீர் என்றனர். அதன் பிறகு ஒரு மனிதர் எழுந்து நின்று என்னையும் அல்லாஹ் அவர்களில் ஆக்கியருள பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களை உக்காஷா முந்திவிட்டார் என்பதாக கூறிவிட்டனர்.

அறிவிப்பவர்: உசேன் பின் அப்துர் ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு

சுவனவாசிகளில் நேர்பாதியாக நீங்கள் இருக்க உறுதியாக நான் ஆதரவு வைக்கிறேன் என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 102

ஒரு கூடாரத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் சுமார் நாற்பது ஆண்கள் (வரை) இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் “சுவனவாசிகளில் நான்கில் ஒரு பங்காக நீங்கள் இருப்பதை பொருந்திக் கொண்டீர்களா?” என கூறினார்கள். நாங்கள் ஆம் எனக்கூறினேம் எனக்கூறினார்கள். (அதன் பிறகு) சுவனவாசிகளில் மூன்றில் ஒரு பங்காக நீங்கள் இருப்பதை பொருந்திக்கொண்டீர்களா? என ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். நாங்கள் ஆம் எனக்கூறினேம். (அதற்கவர்கள்) “முஹம்மதின் உயிர் எவன் கையிலிருக்கிறதோ அவனின்மீது சத்தியமாக, நிச்சயமாக நீங்கள் சுவனவாசிகளில் நேர்பாதியாக இருப்பீர்களென நான் ஆதரவு வைக்கிறேன் என ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்கள். (அதாவது) நிச்சயமாக சுவனத்தில் வழிபட்ட (தன்னை முற்றிலும் இறைவனுக்காக ஒப்படைத்த) உயிரைத்தவிர வேறு எதுவும் நுழையாது. நீங்கள் இனைவைப்பவர்களின் (பால் சேர்த்துப் பார்த்தால்) கருப்பு காளைமாட்டின் தோலில் ஒரு வெள்ளை நிற முடியைப் போன்றே தவிர வேறு இ;ல்லை. அல்லது சிவப்பு காளைமாட்டின் தோலில் ஒரு கருப்பு நிற முடியைப் போன்றே தவிர இ;ல்லை எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லா பின் மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு

ஒவ்வொரு ஆயிரத்திலும் தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது பேரை நரகத்திற்கு செல்ல அனுப்புவீராக என ஆதம் அவர்களுக்கு கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ்வின் கூற்று பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 103

கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஆதமே! என அழைத்தான். இறைவா உன் அழைப்பிற்கு இதோ ஆஜராகி இருக்கிறேன் உனக்கு கீழ்ப்படிகின்ற மகிழ்ச்சிக்காக ஆவலாக காத்திருக்கிறேன் நல்லவைகள் உன் கைவசம் இருக்கின்றன என்று ஆதம் அலைஹிஸ்ஸலாம் பதிலளித்தார்கள். நரகத்திற்கு செல்ல இருப்பவர்களை தனியாக்குவீராக எனக் கூறுகிறான். நரகத்திற்கு செல்ல இருப்பவர்களென்றால் என்ன? எனக் கேட்கிறார்கள். ஒவ்வொரு ஆயிரத்திலும் தொள்ளாயிரத்து தொண்னூற்றொன்பது பேர் என அவன் (அல்லாஹ்) கூறுகிறான். (அந்த நாளைப்பற்றிக் கூறும்போது) அந்நாளில் சிறியவர்கள் வயோதிகத்தை அடைந்து விடுவர். கர்ப்பத்தை உடையவர்கள் தங்கள் சுமையை இறக்கிவைத்து விடுவர். (கர்ப்பஸ்தீரீகள் குழந்தை பெற்று விடுவர்) மனிதர்களை போதையுடைய மயக்கமான நிலையில் காண்பீர்கள். ஆயினும் அவர்கள் போதையுடையவர்களல்லர். எனினும் (அவர்களின் மேல்) அல்லாஹ்வின் தண்டனை கடினமானதாக இருக்கும் (எனக்கூறுகிறான்)

அவர் (இதை கேட்ட ஸஹாபாக்)களுக்கு பெருங்கஷ்டமாகி விட்டது. (ஆகவே) எங்களில் அந்த மனிதர் யார்? எனக்கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள். நன்மாராயம் பெறுங்கள். யஃஜுஜு மஃஜுஜு கூட்டத்தினர்களில் நிச்சயமாக ஆயிரமும், உங்களில் ஒருவருமாவார் எனக்கூநினார்கள். முஹம்மதின் உயிர் யார் கையிலிருக்கிறதோ அவனின் மீது சத்தியமாக! நிச்சயமாக நீங்கள் சுவனவாசிகளில் நான்கில் ஒரு பங்காக இருப்பதை நான் ஆதரவு வைக்கிறேன் எனக்கூறினார்கள்.

(அதைக் கேட்டு) உயர்வான அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீரும் கூறினோம். அதன்பிறகு என் உயிர் எவன் கையிலிருக்கிறதோ அவனின் மீது சத்தியமாக! சுவனவாசிகளில் மூன்றில் ஒரு பங்காக இருப்பதை ஆவல் கொள்கிறேன் என்றனர். அப்போது நாங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீரும் கூறினோம். அதன்பிறகு எவன் கையில் என் உயிர் இருக்கிறதோ அவனின் மீது சத்தியமாக சுவனவாசிகளில் நீங்கள் நேர்பாதியாக இருப்பதை நிச்சயமாக நான் ஆவல் கொள்கிறேன் என்றபின்

மறுமையில் வரும் உம்மத்தவர்களில் உங்களுக்கு உதாரணம். கருங்காளை மாட்டின் தோலில் ஒரே ஒரு வெள்ளை முடியைப் போன்றதாகும். அல்லது கழுதையின் முன்னங்காளில் (கொடங்கையில்) உள்ள அடையாளத்தைப் போன்றதாகும் எனக்கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஸயிது ரளியல்லாஹு அன்ஹு

ஒளு (சுத்தம்) பற்றிய நூல்

“சுத்தமின்றி எந்தத் தொழுகையும் அல்லாஹ் அங்கீகரிக்க மாட்டான்” என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 104

இப்னு ஆமிர் அவர்கள் வியாதியஸ்தராக இருந்த போது அவரை நலம் விசாரிக்க அப்துல்லா பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நுழைகிறார்கள். அப்போது இப்னு ஆமிர் அவர்கள் இப்னு உமர் அவர்களே! எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யக்கூடாதா? என்றார் (அதற்கு)

“சுத்தமி(ஒளுவி)ல்லாத தொழுகையும் போர்களத்தில் திருடிய பொருளிலிருந்து கொடுக்கப்பட்ட தர்மத்தையும் அல்லாஹ் அங்கீகரிக்கமாட்டான் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்ல நான் செவியற்றேன். அப்போது நீர் பஸராவில் இருந்தீர் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஸ்அப் பின் ஸஅது ரளியல்லாஹு அன்ஹு

தூக்கத்திலிருந்து எழும்பொழுது பாத்திரத்தில் கையை நுழைக்கு முன் அதை கழுவுவது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 105

“உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து எழுந்து அவர் தமது கையை மூன்று முறை கழுவும்வரை (தண்ணீர்) பாத்திரத்தில் கையை நுழைக்கவேன்டாம். (ஏனெனில்) நிச்சயமாக அவரது கரம் இரவில் எங்கே இருந்தது என்பதை (அவர்) அறியமாட்டார்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

நடைபாதை, நிழல் ஆகியவற்றில் மலஜலம் கழிக்க ஒதுங்குவது விலக்கப்பட்டதாகும் என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 106

(அதை) செய்பவர் சபிக்கப்படுகிறார். சாபத்திற்குரிய இரு விஷயங்களை அஞ்சிக் கொள்ளுங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது ஸஹாபாக்கள்) அல்லாஹ்வின் தூதர் அவர்களே இரு சாபத்திற்கு உரியது எது? எனக்கேட்டனர். மனிதர்களின் நடைபாதையிலும் அவர்களுக்கு நிழல் தருபவற்றிலும் மலஜலம் கழிக்க ஒதுங்குவதாகும் என்றனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

மலஜலம் கழிக்கின்ற போது மறைத்துக் கொள்வது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 107

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் (வாகனத்தில்) ஒரு நாள் என்னை அமரவைத்தார்கள். என்னிடம் ஒரு ரகசியத்தைக் கூறினார்கள் மனிதர்களில் அதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார்கள். பின்னர் தங்களது தேவையை (மலஜலம் கழிப்பதை) நிறைவேற்றுவதற்காக சென்றனர். உயர்வான இடத்தைக்கொண்டு (பள்ளத்தில் அமர்ந்து தேவையை நிறைவேற்றி) அல்லது ஈச்சமரத்தின் மரைப்பைக் கொன்டு மறைத்துக் கொன்டனர். அது (இச் செய்கையானது) எனக்கு மிக விருப்பமானதாக இருந்தது.

(இப்னு அஸ்மா என்பவர் தனது ஹதீஸில்) ஈச்சமரத் தோட்டத்தின் சுவற்றை மறைப்பாக ஆக்கிக் கொண்டார்கள் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லா பின் ஜஹபர் ரளியல்லாஹு அன்ஹு

மலஜலம் கழிக்க நுழைந்தால் (தயாரானால்) என்ன கூறுவார்கள் என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 108

இரட்சகா! ஆண் னஷத்தான் பெண் னஷத்தான்களின் தீமையிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன் என கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு

மலஜலம் கழிக்கின்றபோது கிப்லாவை முன்னோக்காதீர் என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 109

மல ஜலம் கழிக்க வந்தால் கிப்லாவை முன்னோக்கவோ பின்னோக்கவோ செய்யாதீர்கள். ஆயினும் கிழக்குப்பக்கமாவோ மேற்குப்பக்கமாவோ இருங்கள்.1 என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

நாங்கள் ஷாமிற்கு வந்தோம். கழிவறைகளை கிபுலாவின் பால் ஆக்கப்பட்டு, கட்டப்பட்டிருக்கக் கண்டோம். அதை விட்டு திரும்பிக் கொண்டு அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தோம்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு: 1 மதினாவைப் பொறுத்தமட்டில் கிழக்குப்பக்கமாகவோ மேற்குப்பக்கமாகவோ கிபுலா இல்லை. எனவே கிழக்கு அல்லது மேற்குப்பக்கம் நோக்கும்படி ஹதீஸில் வந்துள்ளது என்பதை அறிக. இந்தியாவைப் பொறுத்தமட்டில் கிப்லா மேற்கில் உள்ளது. எனவே கிழக்கிலோ மேற்கிலோ நோக்கி அமரக்கூடாது என்பதை அறிக.

கட்டிடங்களில் அதற்கு (கிப்லாப் பகுதியில் திரும்பியிருக்க) அனுமதி பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 110

நான் பள்ளியில் தொழுது கொண்டிருந்தேன். அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தங்களது முதுகை கிப்லாவின்பால் திருப்பியிருந்தனர். என் தொழுகையை முடித்துக் கொண்டு என் பகுதியிலிருந்து அவரின்பால் திரும்பினேன். அப்போது அப்துல்லா அவர்கள் “மனிதர்கள் மலஜலம் கழிக்க கிப்லாவை முன்னோக்கியோ பைதுல் முகத்தஸை முன்னோக்கியோ அமரவேண்டாம்” என சில மனிதர்கள் கூறினார்கள் எனக்கூறிக்கொண்டிருந்தனர்.

ஒரு வீட்டின் மேல்பகுதியில் நான் ஏறினேன். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இரு செங்கற்களின்மீது தங்களது தேவையை நிறைவேற்ற பைத்துல் முகத்தஸை நோக்கியவாறு இருக்கக் கண்டேன் என அப்துல்லாஹ் கூறுகிறார்.

அறிவிப்பவர்: வாசிஉ பின் ஹப்பான் ரளியல்லாஹு அன்ஹு

தண்ணீரில் சிறுநீர் கழித்துவிட்டு அதில் குளிப்பது தடுக்கப்பட்டதாகும் என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 111

“தேங்கிக்கிடக்கின்ற தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டு பிறகு அதில் குளிக்கவேண்டாம்” என நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 112

“ஓடாது சதா தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்துவிட்டு பின்னர் அதிலிருந்து குளிக்காதே!” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

சிறுநீர் கழிக்கும்போது மறைத்துக்கொள்வதும் சுத்தமாக்கிக்கொள்வதும் பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 113

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இரு கப்ருகளுக்கு அருகில் சென்றனர். அப்போது “நிச்சயமாக அவ்விருவரும் தண்டிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிந்து கொள்ளுங்கள். (ஆனால்) பெரும்பாவத்தின் காரணமாக இவர்கள் தண்டிக்கப்படவில்லை. ஆயினும் அவ்விருவரில் ஒருவர் கோள் சொல்லிக்கொண்டிருந்தனர். மற்றவர் சிறுநீர் கழிக்கின்ற போது மறைத்துக் கொள்ளாதிருந்தார்” (என்றனர். பின்னர்) ஈச்சமரத்தின் ஈரமான மட்டையைக் கொண்டுவருமாறு கூறினர். அதை இரண்டாகக்கிழித்து, இந்தக் கப்ரின் மீது ஒன்றையும் அந்தக்கப்ரின் மீது ஒன்றையும் நட்டுவைத்துவிட்டு “இவ்விரண்டும் காய்ந்து போகாமல் இருக்கும்வரை அவ்விருவரின் தண்டணையில் குறைக்கப்படலாம்” என்றனர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா

வலக்கரத்தால் சுத்தம் செய்வது தடுக்கப்பட்டது என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 114

“சிறுநீர் கழிக்கின்ற போது உங்களில் யாரும் தனது ஆண்குறியை வலக்கரத்தால் பிடிக்கவேண்டாம், மலம் கழித்தப்பின் அதைத் தனது வலக்கரத்தால் சுத்தம் செய்யவேண்டாம், பாத்திரத்தில் மூச்சுவிட வேண்டாம்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லா பின் அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு

மலஜலம் கழித்துவிட்டு தண்ணீரால் சுத்தம் செய்வது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 115

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், சுவற்றின் பக்கம் ஒதுங்கினர். அவர்களை எங்களில் சிறுவராக இருந்த ஒரு பையன் சுத்தம் செய்யும் பாத்திரத்துடன் தொடர்ந்தார். ஒரு இலந்தமரத்தின்கீழ் அதை வைத்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தங்களது தேவையை முடித்துக்கொண்டு எங்களின்பால் வந்தனர். தண்ணீரினால் சுத்தம் செய்து இருந்தனர்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

சுத்தம் செய்யின் ஒற்றைப்டையாகச் செய்வதுப் பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 115ய

“உங்களில் யாரெனும் கற்களைக்கொண்டு சுத்தம் செய்யின் ஒற்றைப்படையாகச் செய்யவும் உங்களில் யாரேனும் ஒளுச்செய்தால் தனது மூக்கில் தண்ணீர் செலுத்தி அதன்பிறகு சிந்தவும்” அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

கற்களினால் ஒற்றைப்படையில் சுத்தம் செய்வது, காய்ந்த (மல) விட்டை எலும்பு ஆகியவற்றைக் கொண்டு சுத்தம் செய்வது விலக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 116

ஸல்மான் (அல்ஃபார்ஸி) ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், உங்கள் நபி உங்களுக்கு மலஜலம் கழிப்பது உள்பட எல்லாவற்றையும் கற்றுத் தந்திருக்கிறார்கள் (அல்லவா?) எனக்கேட்கப்பட்டது. அதற்கவர்கள்.

“ஆம், மலஜலம் கழிக்கின்றபோது கிப்லாவை முன்னோக்கி இருப்பதைவிட்டும் (அதுபோலவே) வலக்கரத்தால் நாங்கள் சுத்தம் செய்வது, மூன்று கற்களைவிட குறைவானவற்றைக் கொண்டு சுத்தம் செய்வது, காய்ந்த விட்டைகள், எலும்புகள் ஆகியவற்றைக் கொண்டு சுத்தம் செய்வதை விட்டும் எங்களது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களைத் தடுத்துள்ளார்கள்” என்றனர்.

அறிவிப்பவர்: ஸல்மான் ரளியல்லாஹு அன்ஹு

இறந்து போனவற்றின் தேல்களை பதனிட்டு பயன்பெறுவது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 117

மைமூனா அவர்களின் உரிமை எழுதப்பட்ட அடிமை பெண்ணுக்கு ஒரு ஆடு தர்மமாக வழங்கப்பட்டது (வழங்கப்பட்டபிறகு) அந்த ஆடு இறந்துவிட்டது. (அப்போது) அப்பெண்ணுக்கு அருகில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கடந்து சென்றனர். அப்போது “அதன் தோலை நீங்கள் எடுத்து பதப்படுத்தி இருக்கலாம் அல்லவா”? அதன்மூலம் நீங்கள் பயனடைந்திருப்பீர்கள் என்றனர்.

அதைக்கேட்ட அவர்கள் “அது செத்துவிட்டது” என்றனர். அதற்கு நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், “அதை உண்ணுவதுதான் தடுக்கப்பட்டுள்ளது” என்றுரைத்தனர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா

பதனிடப்பட்ட தோல் சுத்தமாகும் என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 118

இப்னுவஃலா அஸ்ஸபஇய்யி என்பவர்மீது (முயல்போன்ற) கால்நடைகளின் தோலினால் உட்பகுதியில் ஆக்கப்பட்ட ஜுப்பா போன்ற ஒன்றை நான் (அபுல்கைர்) கண்டேன். அதைத் தொட்டும்விட்டேன். அதற்கவர் அதைத் தொட உனக்கு என்ன நேர்ந்தது என்றார்? அப்துல்லாஹ் பின் அப்பாஸ் அவர்களிடம் நான் உறுதியாகக்கேட்டேன். “நிச்சயமாக நாங்கள் மொராக்கோவில் இருப்போம், எங்களுடன் பர்பர் (என்ற இனத்தவரும்) நெருப்பு வணங்கிகளும் இருப்பர். ஆட்டுக்கிடாயை அறுத்துக் கொண்டுவரப்படும் நாங்கள் அவர்களின் அறுப்புக்களை திண்ணாதிருந்தோம். எங்களிடம் தோல்பைகளைக் கொண்டுவந்து இறைச்சி, குடல், கொழுப்பு ஆகியவைகளையும் அதில் போடு(ஆக்கு)வர்” (இது பற்றி) நான்கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் அது பற்றிக் கேட்டோம். அதற்கவர்கள், “அதை பதனிடுவதே அதற்குரிய சுத்தமாகும்” எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர்: யஜீது பின் அபீஹபீப், அபுல்கைர் என்பவர் தனக்கு அறிவித்தாகக் கூறுகிறார்.

உங்களில் ஒருவரின் பாத்திரத்தை நாய் நக்கிவிட்டால் அதை அவர் ஏழுமுறை கழுவவும் என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 119

நாய்களைக் கொல்லுமாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு அவர்கள் ‘‘அவர்களுடையவும் நாய்களுடையவும் விஷயம் என்ன?‘‘ எனக்கேட்டுவிட்டு அதன்பிறகு ‘வேட்டை நாய்‘ “ஆடுகளை மேய்க்க உதவும் நாய்களுக்கு அனுமதி வழங்கிவிட்டு”. “ஒரு பாத்திரத்தில் நாய் நக்கிவிட்டால் அதை ஏழுமுறைக் கழுவுங்கள் எட்டாவதுமுறை மண்ணைக்கொண்டு தேயுங்கள்” என்றனர்.

ஆடு மேய்க்க, வேட்டையாட, விவசாயம் செய்ய ஆகிய நாய்களில் அனுமதி தந்தனர் என யஹ்யா பின் ஸயீதுவின் அறிவிப்பில் உள்ளது.

அறிவிப்பவர்: அப்துல்லா பின் அல் முகஃப்பல் ரளியல்லாஹு அன்ஹு

ஒளுவின் சிறப்பு பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 120

“சுத்தம் ஈமானில் பாதியாகும் அல்ஹம்துலில்லாஹ் என்பது தராசை நிரப்பி விடும். ஸுப்ஹானல்லாஹ்வும், அல்லஹம்துலில்லாஹ்வும் தராசை நிரப்பி விடும். அல்லது வானங்கள் பூமி அவ்விரண்டுக்கிடையில் உள்ளவற்றை நிரப்பும், தொழுகை ஒளியாகும், தர்மம் அத்தாட்சியாகும், பொறுமை சுடராகும் இன்னும் திருக்குர்ஆன் (திருமறை) உனக்கு சாதகமாக அல்லது பாதகமாகி இருக்கும். எல்லா மனிதர்களும் அதிகாலையில் (வெளியேறிச்) செல்கின்றனர். (உலகமெனும் சந்தையில்) தம்மை விற்கின்றனர். அவ்வாறு விற்பதன் மூலம் சிலர் (தன்னை நரகிலிருந்து) விடுவித்துக் கொள்கிறார்கள். (வேறு சிலர்) தம்மை அழித்துக்கொண்டு விடுகின்றனர் (நரகம் செல்கின்றனர்)”.

அறிவிப்பவர்: அபு மாலிக் அல் அஷ்அரி ரளியல்லாஹு அன்ஹு

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்