Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 5


ஈமான் பற்றிய நூல்
 
இரவுப்பயணத்தின்1 போது “சித்ரத்துல் முன்தஹா”வின்பால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சென்றடைதல் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 81

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை எந்த இரவில் அழைத்துச்செல்லப்பட்டதோ அவ்விரவில் ‘சித்ரத்துல் 2முன்தஹா’வின்பால் (சென்றடைந்தபின்) அவர்கள் பயணம் முற்றுப்பெற்றுவிட்டது. அப்பயணத்தில் அதுவே அவர்கள் சென்றடைந்த கடைசியாகும். (அதற்கப்பால் செல்லவில்லை). அது ஆறாம் வானத்தில் உள்ளது. 3பூமியிலிருந்து எதையெல்லாம் (வானத்தின்பால்) உயர்த்தப்படுகிறதோ அவையாவும் அதன்பால் சென்று முடிவடைந்துவிடுகிறது. அங்கிருந்துதான் எடுக்கப்படும். (அது போலவே) மேலே இருந்து இறங்கும் யாவும் அங்கு வந்து (தேங்கி) முடிவடைந்துவிடும். அதிலிருந்துதான் எடுக்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அங்கே சென்றடைந்த சமயம் இலந்தை மரத்தை சூழக்கூடியது சூழ்ந்து கொண்ட நேரத்தில் என்ன சூழ்ந்தது என்பதற்கு விளக்கமாக தங்கத்தின் விரிப்பு எனக்கூறினார்கள். 4மூன்று விஷயங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு (அவ்விரவில்) கொடுக்கப்பட்டது.

ஐவேளைத் தொழுகைகளை கொடுக்கப்பட்டார்கள். அல்பகரா அத்தியாயத்தின் இறுதியைக் கொடுக்கப்பட்டார்கள் தன் உம்மத்தில் யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்கவில்லையோ அவரது பெரும்பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகிறது (என்பதையும் கொடுக்கப்பட்டார்கள்) என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

குறிப்பு:

1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளியிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவரை (தரைப்பயணத்தை)யும் பின்னர் மஸ்ஜிதுல் அக்ஸா(எனும்) பைத்துல் முகத்தஸ்ஸிலிருந்து சித்ரத்துல் முன்தஹா வரை விண்ணுலகப் பயணத்தையும் மேற் கொண்டனர். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தோழமையுடன் இப்பயணம் நடந்தேறியது. இப்பயணத்திற்கு பெயர்தான் இஸ்ராஉ, மிஃராஜ் என்பதாகும். இப்பயணம் பற்றித்தான் இரவுப்பயணம் என இந்த ஹதீஸ் வந்துள்ளது.

2. இலந்தை மரத்தின் கடைசி எல்லை. இதைத்தாண்டி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செல்லவில்லை. இதுவே அவர்கள் பயணத்தின் கடைசி எல்லையாகும்.

3. இலந்தை மரத்தின் அடிப்பகுதி ஆறாம் வானத்திலும் அதன் பெரும்பகுதி ஏழாம் வானத்திலும் உள்ளது.

4. என மற்றொறு அறிவிப்பில் வந்துள்ளது.

“வில்லின் இருமுனைகள் அல்லது அதை விட மிக நெருக்கமாக அவர்கள் இருந்தனர்” என்ற அல்லாஹ்வின் கூற்று பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 82

“வில்லின் இருமுனைகள் அல்லது அதை விட மிக நெருக்கமாக அவர்கள் இருந்தனர்” என்ற அல்லாஹ்வின் கூற்று பற்றி (அறிவிப்பாளராகிய) நான் ஜிர்ரு பின் ஹுபைஷ் ரளியல்லாஹ் அன்ஹு என்பவரிடம் கேட்டேன். அதற்கவர் ‘நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கண்டனர். அவருக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க’ என இப்னு மஸ்ஊது ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் தமக்கு அறிவித்ததாக கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : அஷ்ஷைபானீ ரளியல்லாஹ் அன்ஹு

குறிப்பு: மேற்கூறப்பட்ட வசனத்தின் பொருளில் இரண்டு கருத்துக்கள் கொள்ளப்படுகிறது. (1) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அத்தனை நெருக்கமாக கண்டனர். (2) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வளவு நெருக்கமாக அல்லாஹுவைக் கண்டார்கள்.

இவ்விரண்டு கருத்துகளில் மிகத் தெளிவானதும் ஆதாரப்பூர்வமானதும் முதல் கருத்தேயாகும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

ஹதீஸ் எண் : 83

“இதயம் எதைக் கண்டதோ? அது பொய்க்கவில்லை. நிச்சயமாக அவரை (ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை) இரணடாம் முறையாக இரக்கத்தில்(இறங்கும்போது) கண்டனர்” என்ற இறைவசனங்களை ஓதி இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அவரை (ஜிப்ரீலை) இரண்டாவது முறை தங்களது (மனக்கண்ணால்) இதயத்தால் கண்டதாக ” கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : ஹதீஸ் எண் 82-ல் கூறப்பட்ட கருத்து இங்கே தெளிவாக வலியுறுத்தப்படுகிறது என்பதைக் காணலாம்.

மகத்துவமும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ்வை (மனிதனுக்குரிய) முகக்கண்களால் மறுமையில் காண்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 84

நான் 1(அறிவிப்பாளர்) ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா அவர்களிடத்தில் தலையணையின் மீது சாய்ந்தவாறு இருந்தேன். அப்போது “மூன்று விஷயங்கள் (உண்டு) அவற்றில் எதையேனும் ஒன்றைப்பற்றி யாரேனும் பேசினால் அவர் அல்லாஹ்வின் மீது பெரும் பொய்யைக் கூறியவராக இருக்கிறார்.” என ஆயிஷாவின் தந்தையே! என என்னை அழைத்துக் கூறினார்.

அவைகள் யாவை? என நான் கேட்டேன் (அதற்கு ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா) அவர்கள்

1. “நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது இரட்சகனைப் பார்த்தார்கள்” என யார் கூறுகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது பெரும் பொய்யைக் கூறிவிட்டார் என கூறினார்கள்.

நான் (தலையணையின் மீது சாய்ந்திருந்தவன்) எழுந்து அமர்ந்து, “விசுவாசிகளின் தாயார் அவர்களே! எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்” “அவசரப்படாதீர்கள்” எனக் கூறிவிட்டு ‘தெளிவான மேல் மட்டத்தில் நிச்சயமாக அவர் அவரைப் பார்த்துவிட்டார்’ என்றும், ‘நிச்சயமாக அவரை இரண்டாம் முறையில் இறங்குகையில் கண்டனர் எனவும் உயர்வான அல்லாஹ் கூறவில்லையா?’ என நான் (அறிவிப்பாளராகிய மஸ்ரூக்) கேட்டேன்.

(அதற்கு ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா) அவர்கள், “இந்தச் சமூகத்தில் இவ்வசனங்களைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து முதலாவதாக கேட்டது நான்தான். அது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்ததைத்தான் (குறிப்பிடுகிறது). எந்த தோற்றத்தில் படைக்கப்பட்டாரோ அந்த தோற்றத்தில் இந்த இரண்டு தடவைகளில் அல்லாது அவரை நான் பார்க்கவில்லை” எனக் கூறிவிட்டு ‘வானத்திலிருந்து இறங்கக்கூடியவராக, அவரது பிரம்மாண்டமான படைப்பு, வானத்திற்கும் பூமிக்கும் மத்தியில் உள்ளவற்றை அடைத்துக் கொண்டிருக்க நான் கண்டேன் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (மேலும்).

“அவனைப் பார்வைகள் அடையாது. அவன்தான் பார்வைகளை அடைகிறான். அவன் நுட்பமானவன். செய்திகளை அறிந்திருப்பவன்” என்ற அல்லாஹ்வின் கூற்றை நீர் செவியுறவில்லையா? (எனக் கேட்டுவிட்டு மேலும்)

எந்த மனிதரோடும் அல்லாஹ் வஹீயின் மூலமோ அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ தவிர பேசுவதில்லை. அல்லது அவன் ஒரு தூதரை அனுப்பி வைப்பான். அவர் (அத்தூதர்) அவனது உத்தரவு பெற்று அவன் (அல்லாஹ்) விருப்பப்பட்டதை (மனிதர்களுக்கு) அறிவிப்பார். நிச்சயமாக அவன் (அல்லாஹ்) உயர்வுடையவனாகவும், நுண்ணறிவுடையோனுமாவன் என்ற அல்லாஹ்வின் கூற்றை நீர் செவியுறவில்லையா? எனக் கேட்டார்கள்.

2. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து எதையாவது மறைத்துவிட்டார்கள் என (யாராவது) கூறினால், அவர் அல்லாஹ்வின் மீது பெரும் பொய்யைக் கூறிவிட்டார் என (ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா) அவர்கள் கூறிவிட்டு

தூதர் அவர்களே! உங்களது இரட்சகனிடமிருந்து உங்கள்பால் இறக்கி வைக்கப்பட்டதை எத்தி வைப்பீர்களாக! அவ்வாறு நீங்கள் செய்யவில்லையாயின் அவனது தூதுத்துவத்தை நீங்கள் எத்தி வைத்தவராக ஆகமாட்டீர் என அல்லாஹ் கூறுகிறான்.

3. நாளை நடப்பதை நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள். (அதுபற்றிய அறிவு அவர்களுக்கு உண்டு) என யாரேனும் கூறினால் அவர் பெரும் பொய்யைக் கூறிவிட்டார். (ஏனெனில்)

“வானங்களிலும் பூமியிலும் மறைவானவற்றை அல்லாஹ்வையன்றி யார் அறிவார்? (யாரும் அறியமாட்டார்)” என அல்லாஹ் கூறுகிறான் என ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்.

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கி வைக்கப்பட்டதிலிருந்து எதையேனும் மறைக்க கூடியவர்களாக இருந்திருந்தால்,

“எவரின் மீது ” அல்லாஹ் தன் அருளையும் புரிந்து. நீங்களும் அவரின் மீது (அடிமைத்தனத்திலிருந்து உரிமை விட்டு) கருணை செய்தீரோ அவரிடம் உமது மனைவியை நீரே (விவாகரத்து செய்யாமல்) தடுத்து கொள்வீராக! அல்லாஹ்வை நீர் பயந்து கொள்வீராக! என (ஜைது அவர்களிடம், அவரது மனைவி ஜைனபை அவரது விவாகரத்திற்கு பிறகு அல்லாஹ் உங்களுக்கு திருமணம் முடித்து வைக்கப் போகிறான் எனும் விஷயத்ததை) அல்லாஹ் வெளிப்படுத்தக் கூடியவனாக இருந்ததை உங்கள் மனதில் மறைத்தீர்கள் இது விஷயத்தில் மனிதர்களைப் பயந்தீர்கள். (ஆனால்) அல்லாஹ்தான் நீங்கள் பயப்படுவதற்கு மிக உரியவன்” என்ற இந்த வசனத்தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைத்திருக்க வேண்டும். (ஆனால் இதை மறைக்கவில்லை; என ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் : மஸ்ரூக் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு: அறிவிப்பாளருக்கு ஆயிஷா என ஒரு மகள் இருந்தார். ஆகவே தான் ஆயிஷாவின் தந்தையே! என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அழைத்துக் கூறுகிறார்கள்.

ஹதீஸ் எண் : 85

எங்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்று ஜந்து விஷயங்களைக் கூறினர். (அவை) “நிச்சயமாக அல்லாஹ் உறங்க மாட்டான். அவனுக்கு உறக்கம் அவசியமற்றது. தராசை உயர்த்தவும் தாழ்த்தவும் செய்கிறான். பகலின் செயல்(கள்) உயர்த்தப்படும் முன்பே இரவின் செயல்கள் அவன்பால் உயர்த்தப்படுகிறது. இரவின் செயல்கள் உயர்த்தப்படும் முன்பே பகலின் செயல்(கள்) உயர்த்தப்படுகிறது. அவனின் திரை ஒளியாகும் (மற்றொரு அறிவிப்பில் அவனின் திரை நெருப்பாகும்). அவன் அதை நீக்குவானேயானால் அவனுடைய முகத்தின்1 ஒளிக்கதிர்கள், அவனது பார்வை எதுவரை சென்றடைகிறதோ அதுவரை கரித்து (பொசுக்கி) விடும்” எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ மூஸா ரளியல்லாஹ் அன்ஹு

குறிப்பு : 1. இந்த ஹதீஸில் வந்துள்ள முகம் என்ற வார்த்தைக்கு அல்லாஹ்வின் தாத்து - அவனே என்று பொருள் கொள்ள வேண்டும்.

ஹதீஸ் எண் : 86

எங்களின் இரட்சகனை மறுமை நாளில் நாங்கள் காண்போமா? என சில மனிதர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டனர். (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; “பூரணச் சந்திரனின் இரவில் சந்திரனைக் காண உங்களுக்கு ஏதேனும் சங்கடம் உண்டா?” எனக் கேட்டனர். அதற்கு அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! இல்லை! ’ எனக் கூறினார்.

“மேகம் இல்லாத நிலையில் சூரியனைக் காண உங்களுக்கு ஏதேனும் சங்கடம் உண்டா?” என (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) கேட்க. அதற்கு அவர்கள் இல்லை எனக் கூறினர். (பின் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) அவ்வாறே நிச்சயமாக நீங்கள் உங்கள் இரட்சகனை காண்பீர்கள் எனக் கூறினார்கள்.

(காணும் விதம்) மறுமை நாளில் மக்களை அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். (சேர்த்தபின்) யார் எதை வணங்கினாரோ? அதை அவர் பின் தொடரவும் எனக் கூறுவான். சூரியனை வணங்கியவர் சூரியனைப் (பின்) தொடருவார். சந்திரனை வணங்கியவர் சந்திரனை (பின்) தொடருவார். அல்லாஹ் அல்லாத மற்றவைகளை (ஷைத்தான்களை) வணங்கியவர் அவைகளை பின் தொடருவார். (அப்போது) இந்த சமூகத்தில் நயவஞ்சகர்கள் எஞ்சிவிடுவர். (அப்போது) அவர்களுக்கு தெரிந்த தோற்றமில்லாத ஒரு தோற்றத்தில் அவர்களிடம் அல்லாஹ் வந்து நான் (தான்) உங்கள் ரட்சகன் எனக் கூறுவான். (அதற்கவர்கள்) உன்னிலிருந்து அல்லாஹ்வைக் கொண்டு நாங்கள் கார்மானம் தேடுகிறோம். எங்களின் ரட்சகன் எங்களிடம் வரும்வரை இதுதான் எங்களின் இடம். எங்களின் இரட்சகன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் தெரிந்து கொள்வோம் எனக் கூறினர். (அதன்பிறகு) அவர்களுக்கு அறிமுகமான உருவத்தில் அவர்களிடம் அல்லாஹ் வருகிறான். (வந்து) நான்தான் உங்களின் ரட்சகன் எனக் கூறுகிறான். (அதற்கவர்கள்) நீதான் எங்கள் ரட்சகன் எனக் கூறி அவனை அவர்கள் (பின்) தொடருவார்கள். நரகத்தின் இரு (புற) மேல்பகுதிக்கிடையில் “ஸிராத்” என்ற பாலம் நிறுவப்படும். (அப்போது) அதை கடந்து செல்பவர்களில் முதலாமவர் நானும் எனது உம்மத்துக்களும் ஆகும். அந்நாளில் தூதர்களைத் தவிர மற்றெவரும் பேச மாட்டார்கள். அந்நாளில் தூதர்களின் பிரார்த்தனை -“யா அல்லாஹ் நரகிலிருந்து சாந்தியை நல்குவாயாக! சாந்தியை நல்குவாயாக!! ” - என்பதாகவே இருக்கும். முள் நிறைந்த ஸாஅதான் செடியைப்போன்று நரகத்தில் கொக்கிகள் இருக்கும். (எனக் கூறி அச்செடியைப்பற்றி விவரத்தையும் சொல்லிக் காட்டுகிறார்கள்) ஸாஅதான் என்னும் செடியைப்பார்த்து இருக்கிறீர்களா? (எனக் கேட்க) அதற்கவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! ஆம்! என்கின்றனர். நிச்சயமாக அக்கொக்கிகள் - ஸாஅதானைப் போன்றதுதான். ஆயினும் அதன் பிரமாண்டம் என்ன? என்பது பற்றி அல்லாஹ்வையன்றி யாரும் அறிய மாட்டார்கள். (ஸிராத் என்னும் பாலத்தின் மீது செல்லும்போது) அவர்(மனிதர்)களின் செயல்களுக்கு ஏற்றவாறு அக்கொக்கிகள் மனிதர்களை கோர்த்து இழுக்கும். அவர்களில் விசுவாசி(கள்) தன் நற்செயலின் காரணமாக அதிலிருந்து தப்பி விடுவர். அவர்களில் சிலர் கரை சேர்க்கபடும்வரை தண்டிக்கப்படுபவர்களும் உண்டு. எதுவரையெனில் தன் அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவதை முடித்துக் கொண்டபின் நரகவாசிகளிலிருந்து தன்னருளால் யாரை வெளியாக்க அல்லாஹ் விரும்பினானோ அவர்களையும் அவர்களில் யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்கவில்லையோ அவர்களையும்(மேலும்) அவர்களில் யாருக்கு அல்லாஹ் அருள் செய்ய நாடினானோ அவர்களையும் நரகிலிருந்து வெளியேற்றுமாறு அமரர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். நரகிலிருக்கும் அவர்களை, அவர்களின் (நெற்றி) ஸஜ்தா சுவடுகளைக் கொண்டு அமரர்கள் தெரிந்து கொள்வார்கள். ஆதமின் மகனை உடலிருந்து ஸஜ்தாவின் சுவட்டை நரகம் திண்ணுவதிலிருந்து அல்லாஹ் விலக்கி இருக்கிறான். (ஆகவே, அந்த அடையாளத்தை மலக்குகள் அறிந்து) கரிந்து போன நிலையில் அவர்கள் நரகிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். (அதன்பிறகு) அவர்கள் மேல் (சுவன நீர்) ஜீவியத்தண்ணீர் ஊற்றப்படும். வெள்ளம் வந்த பின் அதில் மிதந்துவரும் வித்துகள் (துரிதமாக) முளைப்பது போன்று அதிலிருந்து முளைத்(உயிர்த்)தெழுவர். அதன்பிறகு அல்லாஹ் தனது அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கி முடித்துவிடுவான்.

நரகின் மேல் முகம்கவிழ்ந்து கிடக்கும் ஒருவர் எஞ்சியிருப்பார். அவர்தான் சுவனவாசிகளில் சுவனத்தில் நுழையும் கடைசி மனிதராவார். “என் இரட்சகா! நரகத்தை விட்டும் என் முகத்தை திருப்புவாயாக!” நிச்சயமாக அதன் துர்நாற்றம் என்னை அழித்துவிட்டது. அதனுடைய நெருப்பின் கடின ஜுவாலை என்னை கரித்துவிட்டது என அவர் கூறியவாறு அல்லாஹ் எந்த அளவு நாடினானோ? அந்த அளவு அவர் பிரார்த்தனை செய்தவராக இருப்பார். அப்போது நான் அதை உனக்காக செய்தால் அதல்லாததை நீ கேட்பாயா? என அபிவிருத்திகளை நல்குபவனும், உயர்வானவனுமாகிய அல்லாஹ் கேட்கிறான். (அதற்கு அம்மனிதர்) அதல்லாததை நான் கேட்க மாட்டேன் எனக் கூறி அல்லாஹ் நாடிய அளவிற்கு உறுதிமொழிகளையும் உடன்படிக்கைகளையும் தனது இரட்சகனுக்கு கொடுக்கிறார் (ஒப்பந்தத்திற்கு பிறகு) நரகத்தை விட்டும் அவர் முகத்தை அல்லாஹ் திருப்பி வைக்கிறான். (அவன்) சுவனத்தின்பால் முன்னோக்கி அதை (சுவனத்தை) பார்த்துவிட்டால் எந்த அளவு அவர் பேசாமல் இருக்க வேண்டும் என அல்லாஹ் விரும்பினானோ அந்த அளவு அவர் (அம்மனிதர்) பேசாமல் இருக்கிறார். (பிறகு) எனது இட்சகா! சுவன வாயிலின் பால் என்னை முற்படுத்துவாயாக எனக் கேட்கிறார். (அதைக் கேட்ட அல்லாஹ்) உனக்கு நான் தந்ததையல்லாமல் வேறு எதையும் என்னிடம் நீ கேட்கமாட்டேன் என்று உனது உறுதிமொழிகளையும் உடன்படிக்கைகளையும் எனக்கு நீ கொடுக்கவில்லையா? ஆதமின் மகனே! உனக்கு கேடு உண்டாகட்டும், உனது ஒப்பந்தத்தை உடைக்கச் செய்தது எது? என அல்லாஹ் அவரிடம் கேட்கிறான். (அதற்கவர்) எனது ரட்சகா! என அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கிறார் (நீ கேட்ட) அதை நான் உனக்கு கொடுத்துவிட்டால் அதுவல்லாததை நீ என்னிடம் கேட்பாயா? என அல்லாஹ் கூறும்வரை (துஆச் செய்கிறான்(அவ்வாறு அல்லாஹ் கூறக்கேட்டதும்) உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக இல்லை எனக் கூறி அல்லாஹ் நாடிய அளவிற்கு உறுதிமொழிகளையும் உடன்படிக்கைகளையும் கொடுக்கிறார். (அதற்கொப்ப) அவரை சுவனவாயிலின்பால் அ(ல்லாஹ்)வன் முற்படுத்துகிறான். அவ்வாறாக சுவன வாயிலின்பால் அவன் நின்றுவிட்டால் அவருக்காக சுவனம் திறந்து விரிந்துவிடும். அதிலுள்ள சந்தோஷங்களையும், நல்லவைகளையும் பார்த்துவிடுகிறார். (பார்த்தபின்) அவர் எந்த அளவு பேசாதிருக்க வேண்டும் என அல்லாஹ் நாடியுள்ளானோ? அந்த அளவு பேசாதிருந்துவிட்டு, அதன்பிறகு எனது இரட்சகா! என்னை சுவனத்தில் நுழையச் செய்வாயாக! எனக் கூறுகிறார். (அப்போது) நான் உனக்கு தந்தையல்லாத வேறு எதையும் நீ கேட்கவில்லை என உன் உறுதிமொழிகளையும் உடன்படிக்கைகளையும் தரவில்லையா? ஆதமின் மகனே! உனக்கு கேடு உண்டாகட்டும்! உன்னுடைய உடன்படிக்கையை உடைத்தெறியச் செய்தது எது? என அல்லாஹ் அவரிடம் கேட்கிறான். (அதைக் கேட்ட அவர்) எனது இரட்சகா! உனது சிருஷ்டிகளில் பாக்கியமற்றவனாக நான் ஆகாதிருக்க வேண்டும் என்று தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டே இருக்க அவர் செயலைக்கண்டு அல்லாஹ் சிரித்து விடுகிறான். (அல்லாஹ் சிரித்துவிட்டு) சுவனத்தில் நுழைந்து கொள் எனக்கூறுகிறான். அதில் அவர் நுழைந்ததும். ஆசைப்படு என அவருக்கு அல்லாஹ் கூறுகிறான். (அதற்கொப்ப) தனது இரட்சகனிடம் தன் ஆசைகளையெல்லாம் கூறிக் கேட்கிறார். அவருக்கு இன்னஇன்னவற்றையெல்லாம் (நீ கேள் என்பதாக) அல்லாஹ் நினைவூட்டிக் கொண்டிருக்கும் வரை (கேட்கிறார்) அவரது ஆசைகள் அனைத்திலும் அவர் எதையெல்லாம் நினைத்திருந்தாரோ? அதையெல்லாம் அவர் கேட்டும்வரை (கேட்டு முடித்து) விடுகிறார். அவையனைத்தும் அவை போன்றதும் உனக்கு உண்டு என அல்லாஹ் கூறிவிடுகிறான்.

அபூஸயீதுல் குத்ரீ ரளியல்லாஹ் அன்ஹு, அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு அவர்களிடம் இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த போது அவரின் ஹதீஸிலிருந்து எதையும் மறுக்காதிருந்துவிட்டு, “அவைகளுடன் அவை போன்றதும் உனக்கு உண்டு” எனக் கூறியதும், “அவைபோன்ற பத்து மடங்குகள் அவைகளுடன் உண்டு” எனும் வார்த்தை உண்டு அபூஹுரைராவே! என்கிறார். அதற்கு “அவையும் உண்டு, அவற்றுடன் அவை போன்றதும் உண்டு. ” என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றைத்தவிர வேறெதையும் நான் மனனம் செய்யவில்லை என (அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு) கூறுகிறார்.

“அவையும் அவைபோன்ற பத்து மடங்குகளும் உண்டு ” என்ற கூற்றை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிலிருந்து நான் நிச்சயமாக மனனம் செய்துள்ளேன் என அபூஸயீதுல் குத்ரீ ரளியல்லாஹ் அன்ஹு கூறுகிறார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு

ஏகத்துவவாதிகள் நரகிலிருந்து வெளியேறுதல் பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 87

நரகவாசிகளில் (நிரந்தரமாக) அதற்கே உரியவர்கள், நிச்சயமாக அவர்கள் அதில் இறப்பெய்தவோ, ஜீவிக்கவோ மாட்டார்கள். ஆயினும் உங்களிலுள்ள சிலமனிதர்கள் அவர்களின் பாவங்கள் காரணமாக அல்லது அவர்களின் தவறுகள் காரணமாக நரகம் அவர்களைத்தீண்டி (எரித்து) கரியாக அவர்கள் ஆகிவிடும்வரை(யிலாக்கி அதன்பிறகு) அவர்களை அல்லாஹ் முழுமையாக மரணிக்கச் செய்துவிடுகிறான். அதன்பிறகு பரிந்துரைக்காக அனுமதியளிக்கப்படுகின்றனர். (அதன்நிமித்தம்) அவர்களை பிரிந்துபோன நிலையில் (கொத்து கொத்தாக) கூட்டமாக கொண்டுவரப்பட்டு, சுவனத்தின் ஆறுகளின் மீது உதறப்படுகிறார்கள். அதன்பிறகு; சுவனவாசிகளே! அவர்களின் மீது கொட்டுங்கள்! எனக்கூறப்படும். (அதற்கிணங்க சுவனத்து நீரைக் கொட்டியதுமே) வெள்ளம் சுமந்துவந்த விதை துரிதமாக முளைப்பது போன்று முளைத்துவிடுவர் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். அப்போது அக்கூட்டத்திலிருந்த ஒரு மனிதர், “நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (இந்த உதாரணத்தைக் கூறுவதன்மூலம்) கிராமத்தில் இருந்தவர்களைப் போன்று உள்ளனர்” எனக்கூறுகிறார்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 88

சுவனத்தில் கடைசியாக நுழையும் மனிதர் ஒரு முறை நடப்பார். ஒரு முறை முகம் குப்புற விழுவார். ஓரு முறை அவரை நெருப்பு கரித்துக் கருப்பாக்கி விடும். அந்நரகை (அதை)க் கடந்துவிட்டால் அதன்பால் திரும்பிப்பார்த்து, உன்னை விட்டும் என்னைக் காப்பாற்றிய அவன் பாக்கியமானவன் எனக்கூறுவார். முந்தியவர்கள் பிந்தியவர்கள் எவருக்கும் கொடுக்காத ஒரு பொருளை நிச்சயமாக அல்லாஹ் எனக்கு கொடுத்துவிட்டான் எனக் கூறுவார். அப்போது அவருக்காக ஒரு மரம் உயர்த்தப்படும். (திடீரென ஒரு மரம் முளைத்து நிற்கும்). “என் இரட்சகா! இந்த மரத்திற்கு அருகில் என்னைச் செல்லச் செய்வாயாக! அதன் நிழலை நான் அனுபவித்து நிழல் பெறுவேன். அதன் நீரிலிருந்து தண்ணீரும் அருந்துவேன்” எனக்கூறுகிறார். (அதற்கு) “நான் அதை உனக்கு கொடுத்தால் அதல்லாத மற்ற எதையாவது நீ கேட்பாய் (அல்லவா?)” என அல்லாஹ் கூறியதும் ‘எனது இரட்சகா! இல்லை‘ எனக்கூறிவிட்டு அதல்லாத மற்ற எதையும் அல்லாஹ்விடம் அவர் கேட்கமாட்டேன் என உறுதிமொழியையும் தருகிறார். உயர்வான அவரது இரட்சகன் அவருக்கு மன்னிப்பை அளிக்கிறான். காரணம் அவரால் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை அவன் காணுகிறான். ஆகவே அந்த மரத்திற்கு சமீபமாக அவரை அல்லாஹ் நெருங்க வைக்கிறான். அம்மரத்தின் நிழலைக்கொண்டு அவர் நிழல் பெறுகிறார். அதன் நீரிலிருந்து நீரை அருந்துகிறார். அதன்பிறகு முந்திய மரத்தை விட மிக அழகான ஒரு மரம் அவருக்காக உயர்த்தப்படுகிறது ‘எனது இரட்சகா! இந்த மரத்திற்கு அருகாமையில் செல்ல விடு. அதன் நீரிலிருந்து நான் நீரருந்துவேன். அதன் நிழலுக்கு கீழ் நான் நிழல் பெறுவேன். இதுவல்லாத மற்ற எதையும் கேட்கமாட்டேன்‘ என்கிறார். “ஆதமின் மகனே! இதுவல்லாத மற்ற எதையும் என்னிடம் கேட்கமாட்டாய் என நீ என்னோடு உடன்படிக்கை செய்யவில்லையா?” என அல்லாஹ் கேட்க, (இப்போது அவர் இது கிடைத்துவிட்டால்) இதைத்தவிர வேறு எதையும் கேட்கமாட்டேன் என அவனிடம் உடன்படிக்கை செய்வதாகக் கூறுகிறார். அதற்கு “நான் உன்னை அம்மரத்தின் பால் நெருங்கச் செய்தால் இதுவல்லாத வேறெதையாவது கேட்பாயா? என அல்லாஹ் கூறுகிறான். அப்போது அதுவல்லாத வேறு எதையும் அவனிடம் கேட்கமாட்டேன் என உறுதிமொழி கூறுகிறார். அவரின் இரட்சகன் அதன்மீது அவருக்கு பொறுமையில்லை எனக்காண்பதால் மன்னிப்பளித்து அம்மரத்திற்கு அருகாமையில் நெருக்கி வைக்கிறான். அதன் நிழலில் நிழல் பெறுகிறார். அதன் தண்ணீரை அருந்துகிறார்.

அதன்பிறகு சுவனத்தின் வாயிலில் அவருக்காக ஒரு மரம் உயர்த்தப்படுகிறது. அம்மரம் முந்திய இரு மரங்களை விட மிகுந்த அழகுடையதாக இருக்கும். (அதைக் கண்டதும் அம்மனிதர்) எனது இரட்சகா! அதன் நிழலைக் கொண்டு நான் நிழல் பெறுவதற்காகவும்,அதன் நீரிலிருந்து நீர் அருந்துவதற்காகவும், அம்மரத்தின் பால் என்னை நெருங்கச் செய்வாயாக! இதைத் தவிர வேறு எதையும் நான் கேட்கமாட்டேன் எனக்கூறுகிறார் (அதற்கு) “ஆதமுடைய மகனே! அதைத்தவிர மற்றெதையும் நீ என்னிடம் கேட்கமாட்டாய் என நீ உடன்படிக்கை செய்யவில்லையா?” (என அல்லாஹ் கேட்கிறான்) ஆம்! எனது இரட்சகா! இது மட்டும் தான் இதைத்தவிர வேறு எதையும் நான் கேட்கமாட்டேன் எனக்கூறுகிறார். அதன்மீது அவருக்கு பொறுமையில்லை என அவரது இரட்சகன் கண்டதன் காரணமாக அவரை மன்னித்து அவரது கூற்றை ஏற்று அம்மரத்தின் பால் அவரை நெருங்க வைக்கிறான். அவ்வாறு அவர் சுவனத்திற்கு அருகில் நெருங்கிவிடுவாரேயானால் அச்சந்தர்ப்பத்தில் சுவன வாசிகளின் சப்தங்களை கேட்கிறார். (அவ்வாறு கேட்டதுமே) “எனது இரட்சகா! என்னை அதில் பிரவேசிக்கச் செய்வாயாக!” என்கிறார். (அவனை பார்த்து) “ஆதமின் மகனே! உனது கேள்வியை இத்துடன் முடித்துக் கொள்ள எதைக் கொடுத்தால் நீ பொருந்திக் கொள்வாய். இவ்வுலகையும், அத்துடன் அது போன்றதையும் உனக்கு நான் கொடுத்தபின் அது உன்னை திருப்திபடுத்துமா? (உனக்கு திருப்திதானா?”) எனக் கேட்கிறான். (அதற்கு அந்த மனிதர்) “எனது இரட்சகா! அகிலங்களுக்கு எல்லாம் இரட்சகனாகிய நீ என்னை பரிகாசம் செய்கிறாயா?” எனக்கூறுகிறார். இதைக்கூறிவிட்டு இப்னுமஸ்ஊது சிரிக்கிறார்கள். (சிரித்துவிட்டு) நான் ஏன் சிரித்தேன் என என்னை நீங்கள் கேட்க வேண்டாமா? என்றனர். அதற்கு நீர் ஏன் சிரித்தீர் என அவர்கள் கேட்கிறார்கள் அதற்கவர் (மேலும் இதைக் கூறிய போது) அல்லாஹ்வின் தூதர் அவர்களும் இவ்வாறு தான் சிரித்தனர். (அல்லாஹ்வின் தூதர் அவர்களே!) நீங்கள் எதற்காக சிரித்தீர்கள்! எனக்கேட்கப்பட்ட போது அகிலங்களின் இரட்சகனாக நீ இருக்க என்னைப் பரிகாசம் செய்கிறாயா? என அவர் கூறக்கேட்டு அகிலங்களின் இரட்சகன் சிரித்தானே அதன் நிமித்தம் நானும் சிரித்தேன் எனக் கூறினார்கள்.

நிச்சயமாக உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. ஆயினும், நான் விரும்பியதைச் செய்யும் ஆற்றல் உடையவனாக இருக்கிறேன் என அகிலங்களின் இரட்சகன் கூறினான்.

அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 89

(மறுமை நாளில்) நரகத்தின் மேல் வருவது பற்றி கேட்கப்பட்டதை ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் செவியுற்றதாக அபூஜ்ஜுபைர் அறிவிக்கிறார். “நாம் மறுமை நாளின் போது இவ்வாறு இவ்வாறெல்லாம் வருவோம். (அதாவது ஜனங்கள் கூட்டங்கூட்டமாக நிற்கும்போது) எல்லா ஜனங்களும் மேலாக (முதன்மையாக நம்மை) நான் கண்ணுறுகிறேன் எனக்கூறினார். சமூகத்தவரெல்லாம் அவர்களது விக்ரங்களுடனும், இன்னும் எவற்றையெல்லாம் (உலகில்) வணங்கினார்களோ?, அவைகளுடன் முதலாமவர்
(அதையடுத்த) முதலாமவர் (என) அழைக்கப்படுவர்.”; அதன்பிறகு எங்களுடைய இரட்சகன் எங்களிடம் வந்து யாரை எதிர்பார்கிறீர்கள்? எனக் கேட்பான். அதற்கவர்கள் எங்களது ரட்சகனை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பார்கள். அதற்கவன் நான்தான் உங்களுடைய ரட்சகன் என்பான். (அப்படியென்றால்) உன்னை நாங்கள் பார்க்க வேண்டும் என்பார்கள். (அதற்கிணங்க) சிரித்தவனாக அவர்களுக்கு காட்சியளிக்கிறான். அவர்களை அழைத்துச் செல்கிறான். அவர்கள் அவனைத் தொடர்ந்து செல்கின்றனர். அவர்களிலுள்ள நயவஞ்சகன், மூஃமீன் (விசுவாசி) (ஆகிய) ஒவ்வொரு மனிதருக்கும் ஒளியை அவன் நல்குவான். (அதைப் பெற்றுக் கொண்ட பின்) அவனை தொடருகின்றனர். நரகத்தின் பாலத்தின் மீது கொக்கிகளும், இரும்பினாலான உறுதியான முட்களும் உள்ளன. அல்லாஹ் யாரை (அவை) பிடிக்கவேண்டுமென நாடியிருந்தானே அவர்களை அவைகள் பிடித்துக் கொள்ளும். அதன்பிறகு நயவஞ்சகர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒளி அணைக்கப்பட்டு விடும். பிறகு விசுவாசிகள் (நரகத்திலிருந்து பாதுகாப்பு பெற்று) கரை சேர்ந்துவிடுவர். கரை சேரும் முதல்கூட்டத்தவரின் முகங்கள் பௌர்ணமி இரவின் பூரணச்சந்திரனைப் போன்றிருக்கும். (அவர்கள்) எழுபதாயிரம் பேர்களாவர்!. அவர்கள் கேள்விக்கணக்கு கேட்கப்படமாட்டார்கள். அதன்பிறகு அவர்களை அடுத்துள்ளவர்கள் வானத்திலிருக்கும் மிகப்பிரகாசமான நட்சத்திரம் போன்றவராவார்கள். அதன்பிறகு அவ்வாறே பரிந்துரை துவங்கும். (அல்லாஹ்வின் அனுமதி கொண்டும் அவன் பொருத்தத்துடன்) (பரிந்துரைப்பவர்) பரிந்துரை செய்வர். முடிவாக, “லாஇலாஹ இல்லல்லாஹு ” எனக்கூறி எவர் மனதில் ஒரு கோதுமை மணி அளவு நன்மை (ஈமான்) இருந்ததோ? அவர் நரகிலிருந்து வெளியேற்றப்பட்டு சுவனத்தின் முற்றத்தில் ஆக்கப்படுவர். சுவனவாசிகள் தண்ணிரைத் தெளிக்க ஆரம்பிப்பர். முடிவாக அவர்கள் ஒரு பொருள் வெள்ளம் வந்து சென்றபின் முளைத்துக்கொள்வது போன்று முளைத்துவிடுவர் (நரகத்தில் சுடப்பட்டு கரிக்கப்பட்டிருந்த அக்)கருப்பு நீங்கி விடும். அதன்பிறகு அவர்கள் உலகத்தையும் அத்துடன் அதுபோன்ற பத்துமடங்குகளையும் அவருக்கு ஆக்கப்படுமாறு கேட்பார்.

அறிவிப்பவர் : அபூஜுபைர் ரளியல்லாஹ் அன்ஹு

ஹதீஸ் எண் : 90

கவாரிஜ்களின் கருத்துகளில் (பெரும்பாவம் செய்தவர் நரகிற்கு சென்றபின் வெளியேற மாட்டார். அதிலேயே இருப்பார் என்ற) ஒரு கருத்து என்னை மிகவும் ஆட்கொண்டு விட்டது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய ஒரு ஜமாஅத்தாக நாங்கள் ஹஜ்ஜு செய்ய புறப்பட்டோம். ஹஜ்ஜை முடித்துக்கொண்டு (கவாரிஜ்களின் கொள்கையை மக்களுக்கு எடுத்துக்கூற) புறப்படலாம் என இருந்தோம். வந்து கொண்டிருந்த (திரும்பும்) வழியில் மதினாவை நாங்கள் வந்து அடைந்தோம். அப்போது ஜாபிர் பின் அப்துல்லா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு தூணின் பால் (சாய்ந்து) அமர்ந்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் அவர்களுடைய ஹதீஸை கூட்டத்தவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் நரகவாசிகளைப் பற்றிக் கூறிக்கொன்டிருந்தனர். (அக்கருத்து கவாரிஜ்களின் கருத்துக்கு மாற்றாக இருந்தது).

நிச்சயமாக நீ யாரை நரகத்தில் நுழையச் சொய்தாயோ அவரை நிச்சயமாக நீ இழிவுபடுத்திவிட்டாய் என்று அல்லாஹ் (குர்ஆனில் தம்மைப்பார்த்து கூறும்படி) கூறியிருக்கிறான்.(மேலும்)

“அதி(நரகி)லிருந்து அவர்கள் வெளியேற நாடும் போதெல்லாம் அதி(நரகி)லேயே திருப்பப்படுவார்கள் எனவும் அல்லாஹ் கூறுகிறான். இவ்வாறிருக்க அல்லாஹ்வின் தூதர் அவர்களின் தோழரே! நீங்கள் கூறுகிறீர்களே (இந்த ஹதீஸ்) அது என்ன? அது எப்படி(ச் சரியானதாக இருக்க முடியும்) என நான் (ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹ் அன்ஹு அவர்களைப் பார்த்து) கேட்டேன் எனக் (அறிவிப்பாளர்) கூறுகிறார்.

அதற்கவர் (ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு) “குர்ஆனை ஓதுகிறீரா?” எனக்கேட்டார். “ஆம்” என நான் கூறினேன். “முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்தஸ்து அதாவது (மறுமை நாளின்போது) அல்லாஹ் எந்த ஸ்னாத்திற்கு அவரை அனுப்பிவைப்பானோ? அது பற்றி நீர் கேள்விப்பட்டிருக்கிறீரா?” எனக்கேட்டார். நான் ”ஆம்” என்றேன்.

அப்போது (ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள், “நிச்சயமாக அதுதான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழப்பட்ட ஸ்தானம். அதன்மூலம் அல்லாஹ் யாரை (நரகிலிருந்து) வெளியேற்ற விரும்புகிறானோ அவர்களை (நரகிலிருந்து) வெளியேற்றுவான்” எனக்கூறினார். அதன்பின்னர் “ஸிராத்” (என்னும் பாலம்) அழைக்கப்படுவது பற்றியும், மனிதர்கள் அதன்மேல் செல்வது பற்றியும் வர்ணனை செய்து காட்டினார். அதை நான் பாதுகாக்காது இருந்து விடுவேனோ? என்பதை நான் பயப்படுகிறேன் என (அறிவிப்பாளர் தன்னைப்பற்றிக்) கூறுகிறார். ஆயினும் நிச்சயமாக (ஒரு) சாரார் நரகிலிருந்தபின் நரகிலிருந்து வெளியேறுவர். அதாவது (காய்ந்து கருகிய) எள்ளுச்செடியின் குச்சிகளைப் போன்று வெளியேறுவர் எனக்கூறுகிறார். (அதன்பிறகு) அவர்கள் சுவன ஆறுகளில் ஒரு ஆற்றில் குளிப்பர் (குளித்தப்பின்) வெள்ளை வெளேரென்ற காகிதத்தைப் போன்று வெளியேறுவர் எனவும், ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதைக் கேட்டுவிட்டு (அங்கிருந்து) திரும்பிவிட்டோம் என (யஜீ துல்ஃப(க்)கீர் ரளியல்லாஹு அன்ஹு) கூறுகிறார். உங்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக! இந்த ஷைக் (அறிவிப்பாளர்) அல்லாஹ்வின் மீது பொய் கூறுவாரென நீங்கள் கருதுகிறீர்களா? என நாங்கள் கூறிவிட்டு திரும்பிவிட்டோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (இதைக் கேட்ட பின் இக்கூற்றை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில்) எங்களிலுள்ள ஒரு மனிதர் தவிர மற்றெவரும் வெளியேறவில்லை (அவர் கவாரிஜ்களின் கருத்தைக் கொண்டவராகவே இருந்து விட்டார்) (எனும் நிலையில்) நாங்கள் திரும்பிவிட்டோம். அல்லது அபூநுஜம் அவர்கள் கூறியதைப் போன்று1

அறிவிப்பவர் : யஜீதல் ஃப(க்)கீர் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு: 1பபூல் தக்கீன், முஸ்லிமின் ஆசிரியருக்கு அவர் ஆசிரியராவார். அதாவது முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு ஹதீஸை அறிவித்தவருக்கு (ஹதீஸை) அறிவித்தவராவார். (ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவர்).

ஹதீஸ் எண் : 91

“நரகிலிருந்து நால்வர் வெளியேறுவர். உயர்வான அல்லாஹ்வின் முன் அவர்கள் எடுத்துக்காட்டப்படுவர். அவர்களில் ஒருவர் (தாம் இருந்து வெளியேறி வந்த நரகின்பால்) திரும்பி; “எனது இரட்சகா! இப்போது என்னை வெளியேற்றிவிட்ட நரகத்தில் மீண்டும் என்னை திருப்பி விடாதிருப்பாயாக!” எனக்கூறுவார். அதைக்கேட்ட அல்லாஹ் அவரை நரகிலிருந்து காப்பாற்றுகிறான் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

பரிந்துரை என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 92

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு நாள் இறைச்சி கொண்டுவரப்பட்டு, முன் தொடைப்பகுதி (கொடங்கைப்பகுதி) அவர்களுக்கு (உண்ண) கொடுக்கப்பட்டது. அது அவர்களுக்கு பிரியமான (உணவான)தாகவும் இருந்தது. அதிலிருந்து (ஒரு பகுதியை) பற்களால் கடித்தனர். (பிறகு)

மறுமை நாளின் போது மனிதர்களுக்குகெல்லம் நான் தலைவனாக இருப்பேன். எதனால் அது என்று உங்களுக்கு தெரியுமா? முந்தியவர்களையும் பிந்தியவர்களையும், சமமானதாகவும் விரிவானதாகவும் உள்ள பூமியில் மறுமை நாளின் போது அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

(ஜனங்களில் ஒரு சாரார் உலகில் மறுத்துக் கொண்டிருந்தனரே! அந்த நாள் நிலைநின்று விட்டது என) அழைக்ககூடியவர் அவர்களுக்குக் கேட்க வைப்பார். பார்வை அவர்களை கடந்து செல்லும்1 சூரியன் நெருங்கி வந்துவிடும். தாங்கமுடியாத, அதை சுமக்க சக்தியில்லாத அளவிற்கு மனிதர்களை மனக்கவலையும் சிரமமும் வந்தடையும். நீங்கள் இருக்கின்ற நிலையை நீங்கள் பார்க்க வேண்டாமா? உங்களை அடைந்துவிட்ட(சங்கடங்க)வைகளையும் நீங்கள் பார்க்க வேண்டாமா? உங்களது இரட்சகனின்பால் உங்களுக்காக பரிந்துரைக்கும் ஒருவரை நீங்கள் (தேடிப்பிடிக்க) கண்ணுற வேண்டாமா? என சில மனிதர்கள் சிலரிடம் கூறுவர்.

அதற்கு சில மனிதர்கள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வாருங்கள் என சிலரிடம் கூறுவர். அவ்வாறே ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அவர்கள் வருவர் (வந்து) “ஆதம் அவர்களே! நீங்கள் மனிதர்களுக்குகெல்லாம் (மூலத்)தந்தை அல்லாஹ் தனது கரத்தால் உங்களைப்படைத்து உங்களிலேயே அவனது உயிரிலிருந்து உயிரையும் ஊதி, அமரர்களை கட்டளையிட்டான். அவர்கள் உங்களுக்கு சிரம்பணிந்தனர். உமது இரட்சகன்பால் எங்களுக்காக பரிந்துரை செய்யுங்கள், நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? (எங்களை) அடைந்துவிட்ட(சங்கடங்களை)வற்றை நீங்கள் பார்க்கவில்லையா? எனக்கூறுகின்றனர். அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்; நிச்சயமாக எனது இரட்சகன் இன்றைய தினம் கடுங்கோபமுற்றிருக்கிறான். இதைப்போன்று அவன் கோபப்பட போவதுமில்லை. நிச்சயமாக அவன் என்னை ஒரு மரத்தை விட்டும் தடுத்திருந்தான் அவனுக்கு (அது விஷயத்தில்) நான் மாறு செய்துவிட்டேன். என்னையே! என்னையே! எனக்கூறிவிட்டு என்னைத்தவிர மற்றவர்களிடம் செல்லுங்கள். நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் செல்லுங்கள் எனக்கூறி விடுகிறார்கள்.

நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மக்களெல்லாம் செல்கிறார்கள் (சென்று) ‘நூஹே! பூமியின் பால் அனுப்பட்ட (இறைத்) தூதர்களில் முதலாமவர் நீங்கள். நன்றியுள்ள அடியார் என அல்லாஹ் உங்களுக்கு பெயர் வைத்தான். (ஆகவே) உமது இரட்சகன் பால் எங்களுக்காக பரிந்துரை செய்வீர்களாக! நாங்கள் எதில் இருக்கிறோமோ அதை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களை (வந்தடைந்துவிட்ட) நிலையையும் நீங்கள் பார்க்கவில்லையா எனக்கூறுவர். (அதற்கு நூஹ் அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், ‘நிச்சயமாக என் இறைவன் இனறைய தினம் கோபடைந்து இருக்கிறான். இது போல் இதற்கு முன்பு அவன் கோபப்பட்டதில்லை. (இனி) அவன் இதுபோல் கோபப்படப்போவதில்லை. நிச்சயமாக எனக்கென ஒரு பிரார்த்தனை இருந்தது, எனது சமூகத்தவருக்கு பாதகமாக அதைச் செய்துவிட்டேன். என்னையே! என்னையே!.......எனக்கூறிவிட்டு இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்பால் செல்லுங்கள்‘ என்கின்றனர்.

அந்த ஜனங்கள் இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வருவர். (வந்து) ‘நீங்கள் உயர்வான அல்லாஹ்வின் நபியும், உற்ற நண்பருமாக பூமியிலிருப்பவர்களில் இருந்தீர்கள். (ஆகவே) உங்களது இரட்சகன் பால் எங்களுக்காக பரிந்துரை செய்வீர்களாக! எந்த நிலையில் நாங்கள் இருக்கிறோமோ அதை நீங்கள் காணவில்லையா? எங்களை அடைந்துவிட்ட இந்நிலையை நீங்கள் காணவேண்டாமா?‘ எனக்கூறுகின்றனர். அதற்கு இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நிச்சயமாக எனது இரட்சகன் இன்று கடுங்கோபமுற்றுவிட்டான். இதுபோன்று இதற்கு முன் அவன் கோபப்படவில்லை. இதற்குப் பின்பும் இதுபோன்று அவன் கோபமடையப்போவதில்லை‘ என்று தாம் உலகில் கூறிய (மூன்று) பொய்களை கூறுகிறார்கள். என்னையே! என்னையே! என்னையே! என்னையே!....... என்கின்றனர். என்னையல்லாத மற்றவர்களிடம் செல்லுங்கள். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் செல்லுங்கள் என்கின்றனர்.

ஜனங்களெல்லாம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வருகின்றனர். மூஸா அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர்! தனது தூதுத்துவத்தைக் கொண்டு தனது பேச்சைக் கொண்டும் எல்லா மக்களைவிட அல்லாஹ் உங்களுக்கு சிறப்பை நல்கினான். உமது இரட்சகன் பால் எங்களுக்காக பரிந்துரைப்பீர்களாக! நாங்கள் எந்த (நிலையில்) உள்ளோம் என்று நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள இந்நிலையை நீங்கள் காணவேண்டாமா என்கின்றனர். அப்போது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், நிச்சயமாக எனது இரட்சகன் இன்றையதினம் கோபப்பட்டுவிட்டான். இது போன்று இதற்கு முன் அவன் கோபப்பட்டதில்லை இனியெப்போதும் கோபப்படப்போவது இல்லை. நிச்சயமாக நான் ஒரு உயிரைக் கொன்றுவிட்டேன். அதைக் கொலை செய்யுமாறு எனக்கு கட்டளையிடப்படாமல் இருக்கும் போதே... (அவ்வாறு கொலை செய்து தவறிழைத்து விட்டேன்) என்னையே! என்னையே!.......‘ நீங்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் செல்லுங்கள் என்கின்றனர்.

மக்களெல்லாம் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து, ‘ஈஸா அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர், தொட்டிலில் இருந்தபோதே மக்களோடு பேசினீர்கள், அவனுடைய வார்த்தையை அவன் (அல்லாஹ்) மர்யமின்பால் போட்டான். (தாங்கள்) அவனுடைய கட்டளைக்கிணங்க அவனுடைய புறத்திலிருந்து ஊதப்பட்ட ருஹ் ஆவீர். ஆகவே, எங்களுக்கு உமது இரட்சகனிடமிருந்து பரிந்துரை செய்வீர்களாக! நாங்கள் எந்த நிலையில் உள்ளோம் என்று நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலையை நீங்கள் காணவேண்டாமா என்கின்றனர். அதற்க்கு “நிச்சயமாக எனது இரட்சகன் இன்றையதினம் கோபப்பட்டுவிட்டான். இது போன்று இதற்கு முன் அவன் கோப்பட்டதில்லை இனி எப்போதும் கோபப்பட போவது இல்லை” தனக்குப் எந்தப் பாவத்iதையும் அவர்கள் கூறவில்லை. என்னையே! என்னையே!.......‘என்னையல்லாத மற்றவர்களிடம் செல்லுங்கள் என(வும்) முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள்பால் செல்லுங்கள் என ஈஸா அலைஹிஸ்ஸலாம் கூறுவார்கள். அப்போது அவர்(ஜனங்)கள் என்னிடம் வந்து முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் நபிமார்களில் இறுதியானவர்கள் உங்களது பாவத்தில் முந்திய பிந்தியவற்றை அல்லாஹ் மன்னித்தருளி இருக்கிறான். உமது இரட்சகன் பால் எங்களுக்காக பரிந்துரை செய்வீர்களாக! நாங்கள் எந்நிலையில் உள்ளோமோ அதை நீங்கள் பார்க்கவில்லையா? எங்கள் நிலையை நீங்கள் காணவில்லையா?‘ என்கின்றனர்.

அங்கிருந்து நான் நடக்கிறேன். அர்ஷுக்கு கீழே வருகிறேன். எனது இரட்சகனுக்காக சாஷ்டாங்கத்தில் விழுகிறேன். அதன்பிறகு எனக்கு அல்லாஹ், எனக்குமுன் எவருக்கும் திறந்து காட்டாத விஷயத்தை திறந்து விடுகிறான் அவனது புகழ்களையும் அவனைப் புகழ்வதில் அழகானவற்றையும் எனக்கு (என் மனதில்) உதிக்கச் செய்கிறான். அதன்பிறகு “முஹம்மதே! உமது தலையை உயர்த்துவீராக! கேட்பீராக அதை கொடுக்கப்படுவீர். பரிந்துரை செய்வீராக! நீர் பரிந்துரை செய்விக்கப்படுவீர்” என (எனக்குக்) கூறப்படும். அதன்பின் என் தலையை நான் உயர்த்துவேன். எனது இரட்சகா! என் உம்மத்தவர்! என் உம்மத்தவர்! எனக்கூறுவேன். முஹம்மதே! உமது உம்மத்தவர்களில் யாருக்கு கேள்விக்கணக்கு(கள்) இல்லையோ? அவர்களை சுவனத்து வாயில்களில் வலது வாயிலில் நுழையச் செய்வீராக! என எனக்கு கூறப்படும். இதல்லாத (சுவனங்களின்) அனைத்து வாயில்களிலும் பிரவேசிக்க அவர்கள் மனிதர்களோடு கூட்டுக்காரர்களாக இருப்பர். முஹம்மதின் உயிர் எவன் கைவசமிருக்கிறதோ அவனின் மீது சத்தியமாக! சுவனத்து வாயில்களின் இரு ஓரங்களுக்கும் மத்தியிலுள்ள (இடைவெளி) தூரம் மக்காவிற்கும் “ஹஜர்” என்ற ஊருக்கும் அல்லது மக்காவிற்கும் புஸ்ராவிற்கும் இடையிலுள்ள தூரம் போன்றதாகும். என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு:

1 a. அல்லாஹ்வின் பார்வை எல்லாவற்றின் மீதும் பட்டு விடும் என்பது ஒரு கருத்து. b. சிருஷ்டிகள் எல்ரோரையும் எல்லோரும் பார்த்துவிடுவர் காரணம் மறைப்புகளோ தடுப்புகளோ அங்கில்லை.

2 அல்லாஹ்விற்கு எதுவும் மறைந்ததே கிடையாது ஆகவே இப்போதும் பார்கிறான் எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்பான். எனவே மேலே சொல்லப்பட்ட யஇடி கருத்துகளை இவ்வாசகம் வலியுறுத்துகிறது.

சுவனத்தில் சிபாரிசு செய்யும் மனிதர்களில் முதாலமவன் நான். (நபிமார்களை) தொடரக்கூடிய உம்மத்துகளில் நபிமார்களிலேயே மிகக்கூடுதலான எண்ணிக்கையுடைய உம்மத்துகளை கொன்டவனும் நான் தான் என்பது பற்றிய பாடம் .

நூல் : ஷரஹ் நவவீ பாகம் 3 பக்கம் 67 அபுஸ்ஸ ஆதாத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிடுகிறார்கள்.

சுவனத்தில் சிபாரிசு செய்யும் மனிதர்களில் முதலாமவன் நான். (நபிமார்களை) தொரக்கூடிய உம்மத்துகளில் நபிமார்களிலேயே மிகக்கூடுதலான எண்ணிக்கையுடைய உம்மத்துக்களை கொண்டவனும் நான்தான் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 93

“சுவனத்தில் பரிந்துரை செய்பவர்களில் முதலாமவன் நான். நபிமார்களில் எந்த நபியும் நான் உண்மைப்படுத்தப்பட்ட அளவிற்கு உண்மைப்படுத்தப்படவில்லை. நிச்சயமாக நபிமார்களிலேயே ஒரு நபி இருந்தார்(கள்) அவரை அவரது உம்மத்தில் ஒரே (ஒரு) மனிதரைத்தவிர (வேறு யாரும்) உண்மைபடுத்தவில்லை” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுவனத்தின் வாயிலைத் திறக்கத் தேடுதல் பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 94

“மறுமை நாளில் சுவனத்தின் வாயிலுக்கு நான் வந்து வாயிலைத் திறக்குமாறு கூறுவேன். சுவனத்தின் பொறுப்பாளர் நீ யார்? எனக்கேட்பார். நான் தான் முஹம்மது எனக்கூறுவேன் உங்களுக்குத் திறந்து விடுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் உங்களுக்கு முன்பாக வேறு யாருக்கும் (அக்கதவை) நான் திறக்கமாட்டேன் எனக்கூறுவார்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

“ஒவ்வொரு நபிக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிரார்த்தனை (தூஆ) உண்டு” என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 95

“ஒவ்வொரு நபிக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிரார்த்தனை (தூஆ) உண்டு. ஒவ்வொரு நபியும் தனது பிpரார்த்தனையை (உலகத்திலேயே) துரிதப்படுத்தி(க் கேட்டு) விட்டனர். நிச்சயமாக நான் என் பிரார்த்தனை மறுமை நாளின் போது எனது உம்மத்தவர்களுக்கு பரிந்துரை செய்வதற்காக பிற்படுத்தி வைத்துள்ளேன். என் உம்மத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது இறப்பெய்திவிடுகிறாரோ அவருக்கு இன்ஷா அல்லாஹ் அப்பரிந்துரை கிடைக்கும்” என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

தன் உம்மத்தவர்களுக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரார்த்தனைப் பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 96

“என் இரட்சகா! நிச்சயமாக அவை(விக்ரகங்)கள் மனிதர்களில் அதிகமானோரை வழி கெடுத்துவிட்டன. ஆகவே யார் என்னைப் பின்பற்றுகிறாரோ? நிச்சயமாக அவர்தான் என்னைச் சேர்ந்தவராவார். யார் எனக்கு மாறு செய்கிறாரோ அவரை (உன்னிடம் விட்டு விட்டேன்) நிச்சயமாக நீ மன்னிக்ககூடியவனாகவும், அன்புடையவனாகவும் இருக்கிறாய்” என்ற இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய உயர்வான அல்லாஹ்வின் கூற்றை நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதினார்கள். (அதையடுத்து ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூற்றையும் ஓதினார்கள்)

“அவர்களை நீ தண்டித்தால் நிச்சயமாக அவர்கள் உன் அடியார்களே! அவர்களை நீ மன்னித்துவிட்டால் நிச்சயமாக நீதான் மிகைத்தவனும் ஞானமுடையவனுமாக இருக்கிறாய்” என ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்.

(மேற்கூறப்பட்ட இரு வசனங்களையும் ஓதிய பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) தங்களது இருகைகளையும் உயர்த்தி என் இரட்சகா! என் உம்மத்தவர்! என் உம்மத்தவர்! எனக்கூறிவிட்டு அழுதனர்.

“ஜிப்ரிலே! முஹம்மதின் பால் செல்வீராக! உங்களது இரட்சகன் (நிலைகளையும் நடப்புகளையும்) மிக அறிந்தவனாக இருக்கிறான். ஆகவே, உம்மை அழ வைத்தது எது? என அவர்களிடம் கேட்பீராக!” என அல்லாஹ் கூறினான் (அதற்கினங்க) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் வந்து அதைப்பற்றிக் கேட்டனர். (அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள்) ஏற்கனவே எதைக்கூறினார்களோ? அதைப்பற்றி ஜீப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தெரிவித்தார்கள். அவன் (அல்லாஹ்) அதுபற்றி (இவர்கள் கூறாமலேயே இவர்களுடைய கவலையைப்பற்றி) மிகத் தெரிந்தவனாக இருக்கிறான்.

ஜிப்ரீலே! முஹம்மதின்பால் சென்று “நிச்சயமாக நாம் உமது உம்மத்தினர் விஷயத்தில் உம்மை நாம் திருப்தி படுத்துவோம் உமக்கு (அவ்விஷயத்தில்) நாம் தீமை இழைக்கமாட்டோம் எனக்கூறுவீராக!” என உயர்வான அல்லாஹ் கூறினான்.

அறிவிப்பவர்: அப்துல்லாபின் அம்ருபின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 97

துபைல் பின் அம்ரு அத்தவ்ஸீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! கோட்டை கொத்தளங்களிலும் (மாற்றாரின்) தீமையிலிருந்து உங்களைத் தடுக்கும் சக்திகளிலும் உங்களுக்கு விருப்பம் உண்டா? எனக்கேட்டனர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ஒரு கோட்டை “தவ்ஸ்“ வர்க்கத்தினருக்கு அறியாமைகாலத்தில் இருந்தது. அல்லாஹ் அதை அன்ஸார்களுக்காக சேமித்து வைத்திருப்பதால் (அதை ஏற்க மறுத்து) அதிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டதாகக் கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மதீனாவுக்கு “ஹிஜ்ரத்” சென்ற போது துபைல் பின் அம்ரும் நபியின்பால் ஹிஜ்ரத் செய்தார். அவருடன் அவர் சமூகத்திலிருந்த ஒரு மனிதரும் ஹிஜ்ரத் செய்தார். (வந்தடைந்த) அவர்கள் மதீனாவில் தங்குவதை வெறுத்தனர். அதன் காரணமாக (கூட வந்திருந்த அம்மனிதர்) நோயுற்று நடுங்க ஆரம்பித்தார். (நோயுற்றிருந்த அவர்) தனக்குரிய அகலமான அம்புகளை எடுத்து அதன்மூலம் விரல்களில் இணைப்புகளையெல்லாம் துண்டித்துவிட்டார். (அதன் தொடரில் இறப்பெய்திவிட்ட) அவரை துபைல்பின் அம்ரு (என்பவர்) தன் கனவில் அழகான தோற்றத்தில் கண்டார். அவரது இரு கைகளையும் மூடிய நிலையில் அவரைப்பார்க்கிறார். (பார்த்துவிட்டு) உமது இரட்சகன் உம்மை என்ன செய்தான்? எனக்கேட்கிறார். அவனுடைய நபி- ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம்- அவர்களின்பால் ஹிஜ்ரத் செய்ததன் நிமித்தம் என்பாவத்தைப் பொறுத்து விட்டான். உமது கைகளை மறைத்துக் கொண்ட நிலையில் உம்மை நான் பார்க்கச் செய்தது எது? எனக்கேட்கிறார். அதற்கவர், நீ வீணடித்ததை உன்னில் நாம் சீர் செய்யவே மாட்டோம் என எனக்கு சொல்லப்பட்டு விட்டது எனக்கூறுகிறார்.

இதை துபைல் ரளியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எடுத்துச் சொன்னபோது, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எனது இரட்சகா! அவரது இரு கைகளுக்காக (அவர் செய்தபாவத்தை) மன்னித்தருள்வாயாக! எனக்கூறினார்.

அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு

உமது நெருங்கிய சுற்றத்தார்களை எச்சரிக்கை செய்வீராக! என்ற மகத்துவமும் கண்ணியமும் உடைய அல்லாஹ்வின் கூற்று பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 98

உமது நெருங்கிய சுற்றத்தார்களை எச்சரிக்கை செய்வீராக! என்ற வசனம் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு) இறக்கி வைக்கப்பட்ட பொழுது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறைஷியர்களை அழைத்தனர். அவர்களெல்லாம் ஒன்று கூடிவிட்டனர். (அங்கே) பொதுவாகவும் குறிப்பாகவும் அழைத்து கூறினார்கள்.

கஅபு பின் லுஅய்யின் மக்களே! நரகிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். முர்ராபின் கஅபுவின் மக்களே! நரகிலிருந்து உங்களைக் நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து ஷம்சுவின் மக்களே! நரகிலிருந்து உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து மனாபின் மக்களே! நரகிலிருந்து உங்களைக் நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஹாஷிமின் மக்களே! நரகிலிருந்து உங்களைக் நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்துல் முத்தலீபின் மக்களே! நரகிலிருந்து உங்களைக் நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். பாத்திமாவே நரகிலிருந்து உன்னை காப்பாற்றிக் கொள்.

நிச்சயமாக அல்லாஹ் (உங்களுக்கு கொடுக்கவிருக்கும் தண்டனையிலிருந்து) விடமிருந்து (உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்க) காக்க சக்தியற்றவனாக நான் இருக்கிறேன். எனினும் நிச்சயமாக உங்களுக்கு (என்னுடன்) இரத்த சொந்தம் உண்டு. அதைச்சேர்த்து நடக்க வேண்டிய வகையில் நான் சேர்த்து நட்பேன். (அதை துண்டிக்க மாட்டேன்) எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

அபுதாலிபுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்திவைத்த பலன் பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 99

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அபுதாலிபுக்கு எந்த வஸ்துவைக் கொண்டாவது பலனாக இருந்தீர்களா? அவர் (உங்களை பாதுகாத்து உங்கள் எதிரிகளை மடக்கி) உங்களது நலன் காத்து நின்று, உங்களுக்காக (அவர்கள் மீது) கோபப்பட்டவராயிற்றே என அப்பாஸ் பின் அப்துல் முத்தலீப் கேட்டதற்கு, “ஆம்! அவர் நரகத்தில் (குறைந்த அளவான) கரண்டை மொளிவரை (உள்ள நெருப்பில்) இருக்கிறார். நான் இல்லையெனில் நரகத்தின் அடித்தட்டில் இருந்திருப்பார்” எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்பாஸ் பின் அப்துல் முத்தலீப் ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 100

“நரகவாசிகளில் மிகக் குறைவான தண்டனையை உடையவர் அபுதாலீப் ஆவார். அவர் நெருப்பினால் ஆன இரு காலனிகளை காலில் அணிந்தவராக உள்ளார். அவ்விரண்டில் இருந்து (ஏற்படும் உஷ்ணத்தால்) அவரது மூளைக் கூட கொதிக்கிறது.” என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்